Skip to main content

சுடுகாட்டிலிருந்து வந்த துர்நாற்றம்! தோண்டி பார்த்த காவல்துறைக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

Woman passed away police found body

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், பாக்கம் புதூர் கிராமத்தில் உள்ள பொது இடுகாட்டில் திடீரென பள்ளம் தோண்டி அது மூடப்பட்ட அடையாளம் தெரிந்துள்ளது. மேலும், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். 

 

அந்தப் புகாரின் அடிப்படையில், புதிதாக தோண்டி மூடப்பட்ட அந்த இடத்தை தோண்டி பார்க்க முடிவு செய்தனர். அதன்படி சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன் தலைமையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை உதவிப் பேராசிரியர் டாக்டர் ராம்குமார், அப்பகுதி போதகர் செந்தில்குமார், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சுடுகாட்டில் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தனர்.

 

அந்தக் குழியின் உள்ளே ஒரு சாக்கு மூட்டை இருந்துள்ளது. அதை வெளியே எடுத்துப் பார்த்த போது, மூட்டையின் உள்ளே 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் பிணம் இருந்துள்ளது. மேலும், அவரது வாயில் துணியை கட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் வைத்துக்கட்டி புதைத்துள்ளது தெரியவந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 


தடய அறிவியல் அலுவலர் சர்மிளா தடயங்களை சேகரித்தார். அதன் பின் அந்த உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து மீண்டும் அதே குழியில் பெண் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


யாரோ சில மர்ம நபர்கள் கொலை செய்து, சாக்குமூட்டையில் கட்டி கொண்டு வந்து இந்த சுடுகாட்டில் புதைத்து விட்டுச் சென்றுள்ளனர். கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட அந்த பெண் யார்? கொலை செய்தவர்கள் யார்? எதற்காக இந்த கொலையை செய்தனர்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டவற்றைக் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.