Skip to main content

விடுதியில் பெண்ணிடம் பணபேரம் -விசாரணைக்கு ஆளான ஸ்ரீவில்லிபுத்தூர் காக்கிகள்!

Published on 15/05/2019 | Edited on 20/05/2019

“நடவடிக்கை எடுத்தால் தூக்கில் தொங்கி உயிரை விடுவேன்..”

விருதுநகர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியிடம் இப்படி பேசி நடவடிக்கையில் இருந்து தப்பியிருக்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமைக் காவலர் மாரிமுத்து.  

 

உயிரை விடும் அளவுக்கு அப்படி என்ன விவகாரம்?

 

 Woman at the hotel... sexual worker... Srivilliputhur catches for investigation onto police

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புறக்காவல்நிலைய பாதுகாப்பு அலுவலை மேற்கொண்டு வருபவர் தலைமைக் காவலர் மாரிமுத்து.  பணி நேரத்தில் சீருடை அணிய மாட்டார். உயர் அதிகாரி அறிவுறுத்தினாலும் கேட்க மாட்டார். ஏதோ ஒரு செல்வாக்கில் காவல்துறையில் ‘கெத்து’ காட்டிவந்த அவர், பெண் விவகாரத்தில் சிக்கியதால் விசாரணைக்கு ஆளாகியிருக்கிறார்.  அது என்னவென்றால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலை ஒட்டிய சன்னதி தெருவில் பட்டர் ஒருவருக்குச் சொந்தமான விடுதி ஒன்று இருக்கிறது. அந்த விடுதியில் பாலியல் தொழில் நடந்துவருவது, ஆண்டாள் கோவிலில்  ‘ட்யூட்டி’ பார்க்கும் ஏட்டு மாரிமுத்துவுக்கு தெரியவந்தது. இதை வைத்துப் பணம் பண்ணலாம் என்று திட்டம் போட்ட அவர், இன்ஸ்பெக்டர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு சோதனை என்ற பெயரில் அந்த விடுதிக்குச் சென்றார். அங்கு பாலியல் தொழில் ஈடுபட்ட இளம் பெண் சிக்கிவிட, அவளை இன்னொரு பெரிய லாட்ஜுக்கு இழுத்துச் சென்றார்கள் ஏட்டு மாரிமுத்துவும் அந்த இன்ஸ்பெக்டரும். அங்கு வைத்து, ரூ.1 லட்சம் தந்தால் விட்டுவிடுவேன் என்று பேரம் நடத்தி, ரூ.50000-க்கு இறங்கி வந்திருக்கிறார்கள் இரு காக்கிகளும். இதையறிந்த பாலியல் தரகர் ஒருவர், விருதுநகர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். பாலியல் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டுவது குறித்து இரு காக்கிகளிடமும் விசாரிக்கும்படி அந்த உயர் அதிகாரி உத்தரவிட, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தினார். அப்போது, அந்தப் பெண், ரூ.50000 கேட்டு மிரட்டினார் என்று ஏட்டு மாரிமுத்துவைக் கை காட்டியிருக்கிறாள்.   

 

 

விஷயத்தை அறிந்து ‘அட கேவலமே’ என்று நொந்துகொண்ட விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரி, மாரிமுத்துவை ‘சஸ்பெண்ட்’ செய்வதென்று முடிவெடுத்தார். ஆனாலும், மாரிமுத்துவின் மீது கரிசனம் கொண்டு, சிவகாசி ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்தார். மாரிமுத்துவோ   “என் மீது புகார் அளித்தவர் வீட்டில் உள்ள ஃபேனில் கயிறு மாட்டி தூக்கில் தொங்கி உயிரை விடப்போகிறேன்.” என்று திரும்பத் திரும்ப கெஞ்சியிருக்கிறார்.  உயர் அதிகாரியும் மனமிரங்கி, ஏற்கனவே பார்த்த கோவில் பாதுகாப்பு பணியைத் தொடர்வதற்கு உத்தரவிட்டிருக்கிறார். பாலியல் தொழிலாளியிடம் பேரம் நடத்தியபோது உடன் இருந்த காவல்துறை ஆய்வாளர், நடவடிக்கை என்ற பெயரில்,  இடைத்தேர்தல் நடக்கும் ஒட்டப்பிடாரத்துக்கு,  10 நாட்கள் பணிக்கு  அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். 

 

 

ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜாவை தொடர்புகொண்டோம். “எனக்கு எதுவும் தெரியாது.” என்று லைனை துண்டித்தார். இந்த விவகாரம் குறித்து நாம் விசாரித்து வருவதை அறிந்த ஏட்டு மாரிமுத்துவின் நண்பர் ஒருவர் “மாரிமுத்து ரொம்ப நல்லவர்.” என்றார் நம்மிடம்.  ‘என்ன நடந்ததென்று  அந்த நல்லவர் விளக்கம் தரட்டும். மாரிமுத்துவை பேசச் சொல்லுங்கள்.’ என்றோம்.  மாரிமுத்துவிடம் பேசிவிட்டு நம்மிடம் “மாரிமுத்து விளக்கம் அளிக்க விரும்பவில்லை. செய்தி போட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.” என்றார்.  

 

 

அந்த பாலியல் தொழிலாளி கட்டிட வேலை பார்த்துவரும் வறுமைச் சூழலில் உள்ளவராம். அவரிடம் போய், ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள் காக்கிகள். 

 

                                                                         -அதிதேஜா

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.