Skip to main content

துணி காய வைத்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

Woman drying clothes lost their live due to electric shock

 

சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (28). இன்று புதன்கிழமை அவரது வீட்டின் எதிர்புறத்தில் உள்ள அருண்குமார் என்பவரின் வீட்டைச் சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டு இருந்ததில் செவ்வாய்க்கிழமை இரவு அந்தப் பகுதியில் அடித்த பலத்த காற்றால் மின்கம்பி அருந்து கம்பி வேலியில் விழுந்துள்ளது.

 

இதனைக் கவனிக்காமல் முத்துலட்சுமி துணி காய வைக்கும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். மயக்க நிலையில் இருந்தவர் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதுகுறித்து அண்ணாமலை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் மீண்டும் மின்சார விநியோகம்; பட்டியல் வெளியீடு

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Electricity supply restored in Chennai; Publication of list

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தின இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

நேற்று முற்பகல் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த புயல் ஆனது தீவிரப் புயலாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2:30 மணி அளவில் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், தற்போது சென்னையை விட்டு விலகி 200 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்றது.

 

தமிழ்நாட்டில் இருந்து புயல் விலக்கிச் சென்றதால் சென்னையில் வெகுவாக மழை வாய்ப்பு குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மழை நீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் மின்சார வாரியம் சார்பில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு வருகிறது. மின்சாரம் வழங்கப்பட்டுள்ள பகுதிகளின் விவரங்களை மின்துறை அமைச்சர் தென்னரசு வெளியிட்டுள்ளார்.

 

அதன்படி சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குரிய ஜே.ஜே நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு, கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, எஸ்&பி பொன்னியம்மன் நகர் மற்றும் சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணாசாலை, கிரீம்ஸ் சாலை, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ், ராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள், சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட சி.எம்.பி.டி.டி, ஐசிஎப், இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூ கொளத்தூர், பேப்பர் மில்ஸ் ரோடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகள், சென்னை தெற்கு-l மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகரில் ஒரு பகுதி, கிண்டி, ராமாபுரம், செயின்ட்ஸ் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி மற்றும் சென்னை தெற்கு இரண்டு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மின் சேவை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் படிப்படியாக மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சென்னையை விட்டு விலகிய புயல்; சில மணி நேரத்தில் மின்சார சேவை

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

 Storm left Chennai; Electricity service within hours

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தின இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

நேற்று முற்பகல் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த புயல் ஆனது தீவிரப் புயலாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2:30 மணி அளவில் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், தற்போது சென்னையை விட்டு விலகி 170 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்றது. சென்னையில் இருந்து வடகிழக்கில் 170 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இப்புயல் இன்று முற்பகல் ஆந்திரா அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் இருந்து புயல் விலக்கிச் சென்றதால் சென்னையில் வெகுவாக மழை வாய்ப்பு குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2.30 மணி நிலவரப்படி ஆறு மணி நேரமாக 7 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக கணிப்புகள் தெரிவித்துள்ளன. புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ள நிலையில், சென்னையின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த சில மணி  நேரங்களில் மின்சாரம் படிப்படியாக வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்