Skip to main content

முகக்கவசம் அணியாததற்காக இதுவரை 2,61,344 வழக்குகள் பதிவு - தமிழக காவல்துறை தகவல்!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

without mask peoples tamilnadu police

 

தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, தமிழக அரசின் உத்தரவுப்படி, தமிழக காவல்துறை, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகிறது. அதில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய வலியுறுத்தி, முகக்கவசம் அணியாத நபர்கள் மீது 14/04/2021 அன்று மட்டும் 40,538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 08/04/2021 முதல் இன்று வரை 2,61,344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொருட்டு, சமூக இடைவெளியைப் பின்பற்றாத நபர்கள் மீது 14/04/2021 அன்று மட்டும் 1,011 வழக்குகளும், 08/04/2021 முதல் இன்று வரை 10,018 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் தமிழகத்தில் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு இரு சக்கர வாகனம் ஓட்டும் போது, தலைக்கவசம் அணியாத நபர்கள் மீது 14/04/2021 அன்று 69,653 வழக்குகளும் 08/04/2021 முதல் இன்று வரை 5,39,059 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாத நபர்கள் மீது 14/04/2021 அன்று 14,868 வழக்குகளும் 08/04/2021 முதல் இன்றுவரை 1,07,836 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், அதிகப்படியாக சுமை ஏற்றுதல், வாகனம் ஓட்டும் போது செல்ஃபோன் உபயோகித்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றின் கீழ் 14/04/2021 அன்று 19,551 வழக்குகளும், 08/04/2021 முதல் இன்று வரை 1,38,250 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.' இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.