Skip to main content

'வீட்டு மின் நுகர்வோர்களை இது பாதிக்காது' - தமிழக மின் பகிர்மான கழகம் அறிவிப்பு

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

nn

 

மத்திய அரசு வெளியிட்டுள்ள மின்சார விதிகள் திருத்தம் தமிழ்நாட்டில் நுகர்வோர்களை பாதிக்காது எனத் தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

 

மாலை நேர உச்ச காலங்களில் 20% மின் கட்டணம் கூடுதலாக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விதி வீட்டு இணைப்புகளுக்கு பொருந்தாது என மின் வாரியம் அறிவித்துள்ளது. மின்சார நுகர்வோர் உரிமைகள் விதிகள் 2020ல் சில திருத்தங்கள் செய்ததன் மூலம் நடைமுறையில் உள்ள மின் கட்டணம் அமைப்பில் இரண்டு மாற்றங்கள் செய்து நேற்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த திட்டங்கள் மூலம் தமிழக நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனத் தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் எல்லா நேரங்களிலும் ஒரே விகிதத்தில் மின்சாரத்தின் கட்டணத்தை வசூலிப்பதை விட மின்சார கட்டணம் நாளின் நேரத்திற்கு ஏற்ப மாறுபடுவதே டி.ஓ.டி (Time Of Day) கட்டணமாகும்.

 

இந்த கட்டண முறையின் கீழே சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் நேரங்களில் வசூலிக்கும் கட்டணம் நாள் முழுவதும் வசூலிக்கப்படும் சாதாரண கட்டணத்தை விட 10 சதவீதம் முதல் 20 சதவீதம் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. டி.ஓ.டி நேரம் என்பது ஒரே நாளில் எட்டு மணி நேரம் என்ற அளவில் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிடும் நேரத்தில் அமையும். உச்ச நேரங்களில் கட்டணம் 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த மாற்றம் 2024 ஏப்ரல் ஒன்று முதல் அதிகபட்ச தேவை கொண்ட தொழில்துறை நுகர்வோர்களுக்கும், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விவசாய நுகர்வோர்கள் மற்றும் அனைத்து நுகர்வோர்களுக்கு டி.ஓ.டி கட்டணம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட உடன் இவை அமலுக்கு வரும்.

 

தமிழகத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் டி.நகர் பகுதியில் இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் பல இடங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் பணிகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய விதிகள் மூலம் தமிழ்நாட்டு நுகர்வோர்கள் பாதிப்படைய மாட்டார்கள் எனத் தமிழக மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயிக்கப்படவில்லை. எனவே இதனால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் தமிழகத்தில் வீடுதோறும் வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் திட்டம் எந்த அளவிற்கும் பாதிப்படையாது எனத் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் மீண்டும் மின்சார விநியோகம்; பட்டியல் வெளியீடு

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Electricity supply restored in Chennai; Publication of list

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தின இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

நேற்று முற்பகல் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த புயல் ஆனது தீவிரப் புயலாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2:30 மணி அளவில் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், தற்போது சென்னையை விட்டு விலகி 200 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்றது.

 

தமிழ்நாட்டில் இருந்து புயல் விலக்கிச் சென்றதால் சென்னையில் வெகுவாக மழை வாய்ப்பு குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மழை நீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் மின்சார வாரியம் சார்பில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு வருகிறது. மின்சாரம் வழங்கப்பட்டுள்ள பகுதிகளின் விவரங்களை மின்துறை அமைச்சர் தென்னரசு வெளியிட்டுள்ளார்.

 

அதன்படி சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குரிய ஜே.ஜே நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு, கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, எஸ்&பி பொன்னியம்மன் நகர் மற்றும் சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணாசாலை, கிரீம்ஸ் சாலை, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ், ராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள், சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட சி.எம்.பி.டி.டி, ஐசிஎப், இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூ கொளத்தூர், பேப்பர் மில்ஸ் ரோடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகள், சென்னை தெற்கு-l மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகரில் ஒரு பகுதி, கிண்டி, ராமாபுரம், செயின்ட்ஸ் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி மற்றும் சென்னை தெற்கு இரண்டு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மின் சேவை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் படிப்படியாக மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சென்னையை விட்டு விலகிய புயல்; சில மணி நேரத்தில் மின்சார சேவை

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

 Storm left Chennai; Electricity service within hours

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தின இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

நேற்று முற்பகல் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த புயல் ஆனது தீவிரப் புயலாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2:30 மணி அளவில் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், தற்போது சென்னையை விட்டு விலகி 170 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்றது. சென்னையில் இருந்து வடகிழக்கில் 170 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இப்புயல் இன்று முற்பகல் ஆந்திரா அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் இருந்து புயல் விலக்கிச் சென்றதால் சென்னையில் வெகுவாக மழை வாய்ப்பு குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2.30 மணி நிலவரப்படி ஆறு மணி நேரமாக 7 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக கணிப்புகள் தெரிவித்துள்ளன. புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ள நிலையில், சென்னையின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த சில மணி  நேரங்களில் மின்சாரம் படிப்படியாக வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்