Skip to main content

கணவரின் மிரட்டல்; மரண வாக்குமூலத்தில் உண்மையைச் சொன்ன மனைவி

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

Wife passed away police arrested her husband

 

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகில் உள்ள ஆசாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சங்கீதா(24). இவர், அதே பகுதியில் உள்ள காட்டேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவரைக் காதலித்துள்ளார். திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சங்கீதாவும் முத்துக்குமரனும் குடும்பத்தினரை மீறி  ஐந்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும், நான்கு மற்றும் ஒன்றரை வயதுகளில் இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

 

இந்த நிலையில், முத்துக்குமரன் மது போதைக்கு அடிமையாகியுள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 4ம் தேதி மாலை சமைப்பதற்கு அரிசி வாங்கி வரும் படி சங்கீதா, கணவர் முத்துக்குமரனிடம் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால், முத்துக்குமரன் அந்தப் பணத்தை டாஸ்மாக் கடையில் கொடுத்து மது வாங்கி குடித்து விட்டு இரவு 11 மணிக்கு மேல் வீட்டிற்கு போதையில் வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சங்கீதா, தன் கணவரிடம் சண்டை போட்டுள்ளார். மீண்டும் முத்துக்குமரன் மறுநாள் குடிப்பதற்கு சென்றுள்ளார். 

 

இனிமேல் கணவரைத் திருத்த முடியாது என்று மனமுடைந்த சங்கீதா, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். உடலில் தீக்காயம் ஏற்பட்டு அலறி துடித்துள்ளார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்துள்ளார். 

 

அவர் இறப்பதற்கு முன்பு காவல்துறையினர் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அப்போது அவர், “வீட்டில் கணவருக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும், கணவர் திருந்த வேண்டும் என்பதற்காகவும், கணவரை மிரட்டும் நோக்கத்திலும் என் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிப்பது போல் பாவனை செய்தேன். அப்போது வீட்டுக்குள் வந்த என் கணவரே என் உடலில் தீ வைத்தார். உடல் முழுவதும் படுகாயம் அடைந்து நான் அலறி துடித்தேன். எனது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் என்னை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், என் கணவர் என்னுடன் வரவில்லை. அக்கம்பக்கத்தினர் சண்டை போட்டதால் என்னுடன் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது என் கணவர் நான் தீக்குளித்தது தொடர்பாக போலீசிடமோ, நீதிபதியிடமோ, மருத்துவரிடமோ தன்னைப் பற்றி எதுவும் சொல்லக்கூடாது. அப்படி கூறினால் உன்னைப்போலவே குழந்தையையும் தீ வைத்து கொளுத்தி விடுவேன் என்று மிரட்டினார். அவரது மிரட்டலுக்கு பயந்து நான் மருத்துவரிடம் பொய்யான வாக்குமூலம் அளித்தேன். நான் இப்போது கூறுவது தான் உண்மை” என்று இறப்பதற்கு முன்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

 

சங்கீதாவின் தந்தை சக்திவேல், தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் உடலில் கணவரே தீவைத்து கொலை செய்த சம்பவம் கண்டமங்கலம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.