Skip to main content

மனைவியை மிரட்டி விஷம் குடிக்க வைத்து கொலையா?- குழந்தை உயிரையும் பறித்த கொடூரம்!

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

WIFE AND CHILDREN INCIDENT POLICE INCIDENT

 

கொத்தாளமுத்துவைக் காதலித்துக் கைகூடும் வாழ்க்கை, தன் உயிரையும் குழந்தை உயிரையும் பறித்துவிடும் எனக் கனவிலும் நினைத்திருக்கமாட்டாள் காயத்ரி. ஆனால், காயத்ரியும் அவளுடைய 4 மாத ஆண் குழந்தையும் மர்மமான முறையில் வீட்டில் பிணமாகக் கிடந்தனர்.  

என்ன நடந்தது?

கொத்தாளமுத்துவும், காயத்ரியும் சிவகாசி அருகிலுள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்தபோதே, கொத்தாளமுத்து வீட்டில் ‘இவன் சரியில்லாதவன்.. திடீர் திடீரென்று ஒருமாதிரி நடந்துகொள்வான்..’ என எச்சரித்துள்ளனர். ஆனாலும், காதல் மீதான நம்பிக்கையில் கொத்தாளமுத்துவைக் கரம் பிடித்தாள், தனியார் பள்ளி ஆசிரியையான காயத்ரிக்கு ஆண் குழந்தை பிறக்க, கோகுல் ரக்சன் எனப் பெயர் வைத்தனர்.  

 

கடந்த ஒன்றரை வருடமாக கொத்தாளமுத்து எந்த வேலைக்கும் போகவில்லை. அதேநேரத்தில், காயத்ரியின் 30 பவுன் நகையை விற்று செலவழித்துவிட்டான். அதனால், வீட்டில் சண்டையும் சச்சரவுமாக இருந்துள்ளது. இந்த நிலையில்தான், கொத்தாளமுத்து தலைமறைவாகிவிட, அந்த வீட்டின் மாடியில் உயிரற்ற சடலங்களாகக் கிடந்தனர், காயத்ரியும் குழந்தை கோகுல் ரக்சனும். 

 

உடலில் ஒரு காயமும் இல்லாத நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவில், விஷம் குடித்து காயத்ரி உயிரைவிட்டதும்,  குழந்தை கோகுல் ரக்சன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

கொத்தாளமுத்து இன்னும் பிடிபடாத நிலையில், விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு ‘விஷத்தைக் குடித்துச் செத்துவிடு. இல்லையென்றால் தலையணையால் அமுக்கி குழந்தையைக் கொன்றுவிடுவேன்..’ என்று காயத்ரியை கொத்தாளமுத்து மிரட்டியிருக்கக்கூடும். காயத்ரி விஷத்தைக் குடித்ததும், குழந்தையைத் தலையணையால் அமுக்கிக் கொலை செய்திருக்கக்கூடும்.’ எனச் சந்தேகம் எழுந்துள்ளது. 

 

தலைமறைவான கொத்தாளமுத்து போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கி வாக்குமூலம் அளிக்கும்போதுதான், இருவரது மரணத்தில் உள்ள மர்மம் விலகும்.  

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.