Skip to main content

ரூ.25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது ஏன்..?

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

Why the Rs 25 crore dam broken.. ?

 

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்த தகவலையடுத்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் புகழேந்தி, கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ.கணேசன் என ஏராளமான தி.மு.க.வினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரண்டுவந்து அனைவரும் உடைந்த அணைக்கட்டுப் பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை போராட்டம் நீடித்தது. இதையடுத்து, கடலூர்  துணை ஆட்சியர் ஜெகதீஸ்வரன், கூடுதல் எஸ்.பி. பாண்டியன் மற்றும் விழுப்புரம் மாவட்டக் காவல்துறையினர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில்  போராட்டம் முடிவுக்கு வந்தது. 

 

இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், “தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டப் பிறகு மூன்று முறை அணை நிரம்பியுள்ளது. அணை உடையவில்லை. அருகே உள்ள தடுப்பு சுவர் மட்டுமே சேதம் அடைந்துள்ளது. அது இயற்கையாக ஏற்பட்டதா அல்லது மனித தவறினால் ஏற்பட்டதா என்பது குறித்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 

சேதமடைந்த தடுப்பு சுவர் பணிகளை முடிப்பதற்காக சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த தடுப்பு சுவர் கட்டப்படும்” என்று கூறினார். 

 

இதையடுத்து பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசகர், தடுப்பணை உடைந்தது சம்பந்தமாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் ஜவகர், உதவி செயற்பொறியாளர் சுமதி ஆகிய நான்கு அதிகாரிகளை தற்காலிகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

 

இந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, இந்தத் தடுப்பணை கட்டிய ஒப்பந்த நிறுவனம் நாமக்கல்லைச் சேர்ந்த பிரமுகருடையது என்றும், இந்த நிறுவனம், சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அரசு குடியிருப்பையும் தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நான்கு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளையும் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது என்றும் தெரிய வந்தது. எனவே தரமில்லாமல் கட்டப்பட்டதால் தடுப்பணை உடைந்தது என்ற குற்றச்சாட்டையடுத்து மேற்படி நிறுவனம் செய்து வரும் பணிகளில், எந்த அளவுக்கு தரமாக கட்டுமானப் பணிகளை செய்து வருகிறது என்பதை ஆய்வு செய்யுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.