Skip to main content

மயக்க பிஸ்கட் கொடுத்து 114 ஆடுகளை கடத்திய கடத்தல் மன்னன்!

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவெறும்பூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் 114 ஆடுகளை திருடியதாக திருடன் மயக்க பிஸ்கட் கொடுத்து கடத்தல் சம்பம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் சுமார் 300 வீடுகள் உள்ளன இந்நிலையில் அதிகாலை நேரங்களில் தொடர்ச்சியாக ஆடுகள் காணமல் போயிக்கொண்டே இருந்தன.

 

   who kidnapped 114 goats using Anesthetic biscuits

 

இந்த நிலையில் திடீர் என அதிகாலை நேரத்தில் 4 மணி அளவில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே கட்டியிருந்த ஆடுகளை இருமர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் திருட முயன்றனர். அப்போது ஆடு கத்தியதால் அப்பகுதியினர் விழித்துக்கொள்ள திருட வந்த இடத்தில் நண்பனை கழட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆசாமி தப்பிவிட மற்றொருவன் பொதுமக்களிடம் சிக்கி விட்டான்.

 

 

அவனைப் பொதுமக்கள் பிடித்து கைகளை கட்டிப்போட்டு நையப்புடைத்தனர். இதனிடையே சீருடை அணியாத இரு காவலர்கள் அவனை அடிக்காதீர்கள் என தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் மரக்கடை சேர்ந்த சேட்டு என்றும் அவன் பிரபல வீடு புகுந்து திருட்டு கொள்ளையன் என்பதும். திருச்சி பெரிய செட்டி தெரு கோவிந்தன் மகன் பிரபு என்பதும் தெரியவந்தது. மேலும் தப்பி ஓடியவன் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

 

இந்த பகுதியில் இதுவரை 114 ஆடுகள் களவு போயுள்ளதாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆடு திருவதற்கு இவர்கள் புது மாதிரியான டெக்னிக்கை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆடுகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கடத்தினால் எந்த பிரச்சனையும் வராது என்று மயக்க பிஸ்கெட் கொடுத்து கடத்துவதை வழக்கமா வைத்திருக்கிறார்கள் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த வழக்கில் தற்போது ஜாமினில் வெளிவந்த குற்றவாளி இவன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்; தாய், தந்தை, மகன் கைது!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 mother, father and son, were arrested robbery of AIADMK official  house

திருவண்ணாமலை குபேர மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் முருகன். முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற நகரப் பொருளாளராக இருந்தார். தன்னுடைய குடும்பத்தினருடன் திருமணத்திற்காக வெளியூர் சென்ற நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம் 28ம் தேதி திருவண்ணாமலைக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி ஆகியவற்றைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன், இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

அதிமுக பிரமுகர் முருகன் வீட்டில் கொள்ளையடித்ததாக தந்தை சிவா, தாய் அமுதா, இவர்களின் மகன் ரஞ்சித்குமார் மற்றும் ரஞ்சித்குமார் நண்பர் ஸ்ரீராம் ஆகிய நான்கு பேரையும் தனிப்படை போலீசார் மார்ச் 5 ஆம் தேதி கைது செய்து கிராமிய காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

கொள்ளையடித்த நகைகளில் சுமார் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு எல்.இ.டி. டிவியை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். குறிப்பாக ரஞ்சித்குமார் மற்றும் ஸ்ரீராம் இருவரும் இருசக்கர வாகனத் திருட்டில் கைதாகி சிறைக்குச் சென்று தற்போது வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பாக இவர்களுக்கு ரஞ்சித்குமாரின் தாய், தந்தையர் உதவியாக உள்ளனர் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஸ்ரீராம் என்பவரின் கைரேகை மற்றும் அவரின் சமூக வலைத்தள பக்கங்களைக் கொண்டு அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை வேலூர் சாலையில் உள்ள தீபம் நகரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.

Next Story

தொடர் குற்றச் சம்பவம்; பலே திருடனைச் சுற்றி வளைத்த போலீஸ்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
thief who was involved in two-wheeler theft was arrested

வேலூர், காட்பாடி, திருவலம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போயுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே காட்பாடி ரயில் நிலைய பகுதியில் ஒரு இருசக்கர வாகனம்  திருடு போனது தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து காட்பாடி டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று திருவலம் கூட்ரோடு பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். மேலும் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவமும் இவரின் உருவமும் ஒன்றாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, பிடிபட்ட நபர் திருவலம் குகைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் (வயது 40) என்பதும், இவர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரிய வந்தது.

அவரைக்  கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 15 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.