Skip to main content

திமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? யார்?

Published on 21/01/2020 | Edited on 22/01/2020

தமிழகத்தில் சமீபத்தில் முடிவடைந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக அதிகம் இடங்களை கைப்பற்றிய நிலையில் திருச்சி மாவட்டம் ஒட்டுமொத்தமாக 14 ஒன்றியங்களையும் திமுக வசமாகியுள்ளது. வெற்றிபெற்றவர்களை திமுக தலைவர் ஸ்டாலினிடம் அழைத்து சென்று ஆசீர்பெற்றனர்.

 

 Who are the new District Secretaries in DMK?


இந்த நிலையில் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு தன்னுடைய 40 ஆண்டுகால அரசியலில் 30 ஆண்டுகள் மாவட்ட செயலாளராக இருந்தவர். திமுகவின் பல்வேறு மாநில மாநாடு, பேரணி, பொதுக்கூட்டம் என நடத்தினர். கூட்டணி கட்சியினர் இடையே பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்தவர். திமுகவில் சீனியர் அமைச்சராக வலம் வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு தற்போது கட்சியில் மாநில பொறுப்பு கொடுக்க போவதாக கட்சியினர் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வரும நிலையில். இன்று சென்னையில் அவசரமான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைத்து பாராட்டுவிழா மற்றும் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றுது.

 Who are the new District Secretaries in DMK?


அதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுபெற்றுள்ளது. இது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரையில் வடக்கு மாவட்டத்திற்கு தியாகராஜனும், தெற்கு மாவட்டத்திற்கு கே.என். நேரு இருந்து வருகிறனர். தற்போது கே.என்.நேருவுக்கு தலைமை கழகத்தில் முக்கிய பொறுப்புக்கு உயர்த்தப்பட உள்ளதால் அந்த இடத்தை திருச்சி மாநகர செயலாளர் முன்னாள் துணைமேயர் அன்பழகனுக்கு கொடுக்க வேண்டும் என்று கே.என்.நேரு சிபாரிச செய்திருக்கிறார். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலினும் ஒப்புதல் கொடுத்து விட்டார்.

 

 Who are the new District Secretaries in DMK?

 

இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்பில் தர்மலிங்கத்தின் பேரன் அன்பில் மகேஷ் திருவரம்பூர் தொகுதியில் ஜெயித்து எம்.எல்.ஏ. ஆனா நிலையில் தானும் மா.செ.வாக பதவி வேண்டும் என்று கோரிக்கை திமுக தலைவர் மகன் உதயநிதி மூலம் வைக்க. தற்போது அன்பில் மகேசின் கோரிக்கையும் ஏற்கப்பட்டு திருச்சி மாவட்ட திமுக 3 மாவட்டமாக பிரிக்கப்பட உள்ளது.
 

 Who are the new District Secretaries in DMK?

 

திருச்சியில் புதிய மா.செயலாளர்களாக வழக்கறிஞர் பாஸ்கர், காடுவெட்டி தியாகரன், அன்பில் மகேஷ் ஆகியார் தயார் ஆகி வருகிறார்கள்.!
          

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.