Skip to main content

எது திராவிட மாடல்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்! தொண்டர்கள் உற்சாகம்!!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

Which is the Dravidian model? Chief Minister MK Stalin's explanation! Volunteers are excited !!

 

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இனஉரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் இயங்குவதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

 

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவு அடைந்ததையொட்டி, மாநிலம் முழுவதும் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை என்ற பெயரில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. 

 

சேலம் மாவட்டம், ஆத்தூரில், அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 24) நடந்தது. இக்கூட்டத்தில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

 

அவர் பேசியதாவது, "கரோனா தொற்று தீவிரம் தணிந்து விட்டதால் பொதுக்கூட்டம் நடத்துவதைத் தொடங்கி இருக்கிறோம். தலைமைக் கழகம் அறிவிக்கின்ற கூட்டங்கள் மட்டுமின்றி, தெருமுனை கூட்டங்கள், பாசறை கூட்டங்கள் போன்ற சிறு சிறு கூட்டங்கள் மூலம் மக்கள் மனதில் அரசின் சாதனைகளை பதிய வைக்க வேண்டும்.  

 

தி.மு.க. தொடங்கி, 70 ஆண்டுகளைக் கடந்து அதே எழுச்சியோடு உணர்ச்சியோடு இருக்கிறது என்றால், ஆளுங்கட்சியாக இருக்கும்போது செய்த சாதனைகள் மட்டுமின்றி, எதிர்க்கட்சியாக இருந்தபோது செய்த போராட்டங்கள்தான் காரணம் என்பதை மறந்து விடக்கூடாது. நம்முடைய சாதனைகளை மறைக்க முடியாது. போராட்டங்களை மறக்க முடியாது. தி.மு.க.தான் தமிழ்நாட்டின் விடியலுக்கும், தமிழ் மக்களின் வாழ்வுக்கும் பாதுகாப்பு. தமிழ்நாட்டு மக்களின் மனதில் ஆழமாக பதிவதற்கு காரணம், நம்முடைய கொள்கை பரப்புரைகள்தான்.

 

எத்தனை நச்சு சக்திகள் முளைத்து, கழகத்திற்கு எதிரான விஷம பிரச்சாரம் செய்தாலும் கழகம் யாராலும் வீழ்த்த முடியாத சக்தியாக இருக்கக் காரணம், நம்முடைய பிரச்சாரங்கள்தான். அதற்குக் காரணம் நீங்கள்தான். இத்தகைய பரப்புரை பணிகளை நாம் எப்போதும் விட்டுவிடக்கூடாது. மக்களிடம் தொடர்ந்து பரப்புரை செய்யுங்கள். உங்களின் பரப்புரைதான் கட்சியை வலுப்படுத்தும்.  

 

இது எனது அரசு என்று எப்போதும் சொன்னதில்லை. இது நமது அரசு. இந்த ஆட்சியை நான் மட்டும் நடத்தவில்லை. நாம் அனைவரும் சேர்ந்துதான் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லுகிறோம். திராவிட மாடல் என்றால் என்ன? என்று சிலர் கேட்கிறார்கள். சமத்துவமும் சமூகநீதியும் என்னவென்று கூட சிந்திக்கத் தெரியாதவர்களிடம் இருந்து இந்தக் கேள்வி எழுகிறது. 

 

இல்லாத போலி பிம்பங்களை கட்டமைக்கத் தெரிந்த அவர்களுக்கு, இருப்பதை கண் திறந்து பார்க்க மனசு இல்லை. ஆனால் பெரியார், அண்ணா, கலைஞர் என இந்த சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களின் வளர்ப்பாக இருக்கக்கூடிய நமக்கு, திராவிட மாடலை வளர்க்கும் கடமை இருக்கிறது. மானுட சமுதாயத்தை மேம்படுத்தக்கூடிய முற்போக்குக் கருத்துகளை உயர்த்திப் பிடிக்கக்கூடிய திமுக தொண்டர்கள், திராவிட மாடலை எட்டுத் திசைக்கும் விளக்கிச் சொல்லுங்கள். 

Which is the Dravidian model? Chief Minister MK Stalin's explanation! Volunteers are excited !!

நாம் அனைவரும் சேர்ந்து நடத்தும் இந்த ஆட்சியின் இலக்கணமாக திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் அடங்கி இருக்கிறது. திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இனத்தின் பெயரால், இடத்தின் பெயரால், மொழியின் பெயரால் வழங்கப்பட்டு வந்திருந்தாலும் இன்று திராவிடம் என்றால் ஒரு அரசியல் தத்துவத்தின் பெயராக இருக்கிறது. 

 

அத்தகைய அரசியல் தத்துவத்தை எத்தனையோ பெரிய மேதைகள் சேர்ந்து நமக்கு உருவாக்கிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். பண்டிதர் அயோத்திதாசரும், பெரியாரும் நமக்கு திராவிடயியல் கோட்பாட்டை உருவாக்கித் தந்தார்கள். சர். பிட்டி. தியாகராயரும், டி.எம்.நாயரும், டாக்டர் நடேசனாரும் உருவாக்கிய சமத்துவம்தான் சமூகநீதி தத்துவம். 

 

சாதியை ஒழித்தல், சமூக விடுதலை குறித்து பாரதிதாசனும் நமக்கு உணர்த்தி விட்டுச் சென்றுள்ளார். மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரும் நமக்கான பெண் விடுதலைச் சிந்தனைகளை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இனமான உணர்வைப் பெறவும், மாநில உரிமைகளுக்காக வாதிடவும் அண்ணாவும், பேராசிரியரும் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். ஒரு நவீன தமிழகம் எந்தெந்த வகையில் எல்லாம் இருக்க வேண்டும் என்பதை கலைஞர் நமக்குக் காட்டியிருக்கிறார்.  

 

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இனஉரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் இருக்கும் இயக்கம்தான் தி.மு.க. அத்தகைய இயக்கம் நடத்தும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இல்லாமல், சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒன்று சேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் காண விரும்பிய ஆட்சி. 

 

தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலைவாய்ப்பு அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். இதைத்தான் திராவிட மாடல் ஆட்சி உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் இயற்கை வளம் இருக்கு. சீரான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கு. மனித வளம் இருக்கு. சமூக பொறுப்புணர்வு இருக்கு. உலகறிந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள். இந்த அடித்தளத்தை கொண்டு வர நினைக்கிறோம். நம்மால் வளர முடியும். நம்மை வளர்க்க திராவிட மாடலால் மட்டும்தான் முடியும். 

 

திராவிட மாடல் என்பது எதையும் சிதைக்காது; சீர் செய்யும். யாரையும் பிரிக்காது; அனைவரையும் ஒன்று சேர்க்கும். யாரையும் தாழ்த்தாது; அனைவரையும் சமமாக நடத்தும். யாரையும் புறக்கணிக்காது; தோளோடு தோள் நின்று அரவணைக்கும். அத்தகைய அடிப்படையில்தான் இந்த ஆட்சி நடந்து வருகிறது. மிகப்பெரிய தொழில்நிறுவனங்கள் உருவாக்குவதற்கு திட்டங்கள் தீட்டினாலும்,  ஓர் ஏழை எளிய நரிக்குறவ பெண்ணின் கோரிக்கையையும் காது கொடுத்துக் கேட்கக்கூடிய அரசுதான் நம்முடைய அரசு என்பதை மறந்து விடக்கூடாது. 

கோடிக்கணக்கான மதிப்பிலான திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் அதே நேரத்தில் இருளர் இன மக்கள், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை ஏற்று அவர்களின் மனம் குளிரும்படி திட்டங்களை தீட்டுவதுதான் இந்த அரசு. இந்த திராவிட மாடல் தத்துவத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்துகிறது என்பதை கழக செயல்வீரர்கள் நாட்டு மக்களுக்கு திரும்ப திரும்பச் சொல்லுங்கள். இது ஒரு கட்சியின் அரசு அல்ல. ஓர் இனத்தின் அரசு என்பதை சொல்லுங்கள். 

 

ஐந்து ஆண்டுகள் மட்டுமல்ல. இனி தமிழ்நாட்டை தி.மு.க. மட்டுமே ஆளுமேயானால், தமிழ்நாடு என்பது உலகளவில் சிறந்த மாநிலமாக மாறும் என்பதை சொல்லுங்கள். நிதிநிலை மட்டும் இன்னும் சீராக இருக்குமானால் இன்னும் ஏராளமான திட்டங்களை தீட்டி இருக்க முடியும். ஆனால் படிப்படியாக நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் அண்ணா மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்... உறுதியாக நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். 

 

நான் கொடுத்த வாக்குறுதியை மக்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். இந்த ஓராண்டு காலத்தில் எவ்வளவு சாதனைகள் செய்திருக்கிறோம் என்று சொன்னால், இத்தகைய நிதிநெருக்கடியை பொறுத்துக் கொண்டுதான் செய்திருக்கிறோம். உழைப்பு உழைப்பு உழைப்பு என்று கலைஞர் என்னைப் பற்றிச் சொன்னார். அந்த வகையில் இந்த நாட்டு மக்களுக்காக என் சக்தியையும் மீறி உழைப்பேன் உழைப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். 

 

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தி.மு.க. பெயர், கருப்பு சிவப்பு கொடி, உதயசூரியன் சின்னம் ஆகிய ஆறும் தமிழ்நாட்டின் மக்களின் இதயத்திலே சிந்தனையிலே செயலிலே ஆறாக ஓட வேண்டும் என்று ஆத்தூரிலே உறுதி ஏற்போம். அதுவே தமிழ்நாட்டை வளப்படுத்தும் நலப்படுத்தும்." இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

 

திராவிட மாடல் குறித்து முதல்வர் பேசும்போது, அதை வரவேற்கும் விதமா தொண்டர்கள் விசில் அடித்தும், கரவொலி எழுப்பியும் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.