Skip to main content

தபால் வாக்குகள் உரிய இடங்களுக்குச் செல்கிறதா என்பதில் சந்தேகம் எழுகிறது? - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

தபால் வாக்குகள் உரிய இடங்களுக்குச் செல்கிறதா என்பதில் சந்தேகம் எழுகிறது? - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி!

 

தமிழகத்தில் 100 சதவீத தபால் வாக்குப் பதிவை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என ஜே.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.


ஜே.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில்  நடந்தது. கூட்டணியின் மாநிலத் தலைவர் குன்வர்ஜோஸ்வா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தபால் வாக்குப்பதிவு தொடர்பாக தமிழகத் தேர்தல் ஆணையருக்கு அவசரக் கடிதம் அனுப்பப்பட்டது.


இது தொடர்பாக பேசிய கூட்டணியின் மாநிலத் தலைவர் குன்வர்ஜோஸ்வா, "தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுவதற்குப் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் 100 சதவீத தபால் வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய முன்வரவேண்டும். தேர்தல் பணிக்கு வரும் பெரும்பாலான அரசு ஊழியர்கள் தபால் வாக்கைச் செலுத்தி விடுகின்றனர். ஆனால், வாக்கு எண்ணும் மையங்களில் குறைந்த சதவீத வாக்குகளே பதிவாகி வருகின்றது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் (அஞ்சல் பெட்டி மூலம் அனுப்பப்படும்) தபால் வாக்குகள் முறையாக வாக்கு என்னும் இடங்களுக்குச் செல்கிறதா என்பதில் சந்தேகம் எழுகிறது. எனவே சாதாரண அஞ்சல் பெட்டி மூலம் தபால் வாக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். தபால் வாக்குகள் பெறப்படும் அலுவலகங்களில் தபால் வாக்குகள் பதியப்பட்டு ரசீது வழங்கப்பட வேண்டும். தபால் வாக்குகளுக்கான உரிமைகளை தேர்தல் ஆணையமே வழங்கும்போது தபால் வாக்குகளில் கெஜட் அதிகாரி கையெழுத்து கட்டாயம் என்பதைத் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்திக் கடிதம் அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார்.   
                                           
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காலை சிற்றுண்டி திட்டத்திற்கு கலைஞர் பெயரை வைக்க வேண்டும்” - ஆசிரியர் சங்கம் கோரிக்கை! 

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

"Kalaignar name should be included in the breakfast program" - Teachers Association request!

 

தமிழ்நாடு அரசின் பொறுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஏற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி திட்டம். இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

 

இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்று அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்து இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக மாற்றிவரும் முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப்பாராட்டுகிறேன்.


ஓராண்டு நிறைவையொட்டி ஐம்பெரும் அறிவிப்புகள். குறிப்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் அறிவிப்பு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களிலிருந்துதான் குழந்தைகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் வருவதால் ஒருவிதமாக சோர்வாகவே காணப்படுவார்கள்.


இதனால் கல்வியில் கவனம் செலுத்தமுடியாது. உடலும் உள்ளமும் ஒருசேர அமைந்தால்தான் கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும். இதனையறிந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் அதற்கு முன்மாதிரியாக நான் பணிபுரியும் பள்ளியில் 2018 முதல் 2020 மார்ச் மாதம் வரை (கொரொனாவிற்கு முன்பு) காலைச் சிற்றுண்டி வழங்கினேன் என்பது குறிப்பிடத்தக்கது.


மாநிலம் முழுதும் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலைச்சிற்றுண்டி வழங்கவேண்டும். உடலும் உள்ளமும் ஒருசேர இருந்தால்தான் கற்றல்-கற்பித்தலில் கவனம் செலுத்தமுடியும் என்பதை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் ஆட்சிக்கு வந்த ஓராண்டு நிறைவில் வரலாற்றுச் சிறப்பிக்க அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த பெற்றோர்களின் வயிற்றிலும் பாலை வார்த்திருக்கிறார் முதல்வர்.


இதன் மூலம் கல்வித்திறன் வளர்வதோடு மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும் என்பதில் மிகையில்லை. மேலும் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும் போக்கும் திட்டம், மேல்நிலைப்பள்ளிகள் அனைத்து வசதிகளையும் கொண்ட தகைசால் பள்ளிகள் அறிவிப்பு மேலும் ஒரு மைல்கல். மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 5 அறிவிப்புகளை அறிவித்த மாண்புமிகு முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


கல்வியினை  தரம் உயர்த்தும் வகையில் முதற்கட்டமாகத் தொடக்கப் பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாகவும் மாற்றுவதற்கு பரிசீலனை செய்தும், காலைச் சிற்றுண்டித் திட்டம் படிப்படியாக உயர்நிலைப்பள்ளி வரை உயர்த்திடவும் காலைச் சிற்றுண்டி திட்டத்திற்கு ‘டாக்டர். கலைஞர் காலைச் சிற்றுண்டி திட்டம்’ என்று பெயர் சூட்டிட   தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

தபால் வாக்குகள்... வேகமேடுக்கும் திமுக... துரத்தும் அதிமுக...

Published on 02/05/2021 | Edited on 02/05/2021

 

ddd

 

தென் சென்னைக்குட்பட்ட வேளச்சேரி, சைதாப்பேட்டை, மைலாப்பூர், தி.நகர், விருகம்பாக்கம் ஆகிய 5 தொகுதிகளில் எண்ணப்பட்டு வரும் தபால் வாக்குகளில் திமுகவும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் முன்னிலையில் இருக்கின்றன. திமுக கூட்டணியை தம் கட்டித் துரத்திக்கொண்டிருக்கிறது அதிமுக. இப்போது வரை இவற்றுக்கான வித்தியாசம் 500 முதல் 1000 வாக்குகள் வரை இருக்கிறது.

 

வேகமெடுத்து வருகிறது திமுக; துரத்துகிறது அதிமுக. இருப்பினும், தபால் வாக்குகளில் திமுகவுக்கு நெருக்கமாக அதிமுக வாக்குகள் பெற்றிருப்பது திமுகவினரை ஆச்சரியப்பட வைக்கிறது. தபால் வாக்குகளில் 90 சதவீத வாக்குகள் திமுகவுக்குத்தான் கிடைக்குமென்றும், அதிமுக சொற்ப அளவில்தான் வாங்கும் என்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்த நிலையில், கணிசமான வாக்குகளை அதிமுக பெற்றிருப்பது அதிமுக ஏஜென்டுகளை  உற்சாகப்படுத்தியிருக்கிறது.