Skip to main content

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையா, இல்லையா.. மக்களைக் குழப்பும் முதல்வரும் ஆளுநரும்..!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

Whether it is a ban on New Year celebration or not pondicherry .. the CM and governor to confuse the people ..!

 


“புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை இல்லை” - நாராயணசாமி
“கொண்டாட்டங்களைக் கண்காணிக்க வேண்டும்” - கிரண்பேடி

குழப்பமான அறிவிப்புகளால் சுற்றுலாவாசிகள் இடையே குழப்பம் நிலவிவருகிறது.

 

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி வாசிகள் மட்டுமல்லாது தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாவாசிகளும் புதுச்சேரிக்குப் படையெடுப்பார்கள். புதுச்சேரியின் புகழ்பெற்ற கடற்கரை பகுதிகள், காந்தி மண்டபம் போன்ற இடங்களில் சுற்றுலாவாசிகள் புத்தாண்டை கொண்டாடுவர். மேலும் ஹோட்டல்கள், மால்கள், தங்கும் விடுதிகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருக்கும். ஆனால், இந்த ஆண்டு கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொது இடங்களில் புழங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை 2021 புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் மாறுபாடான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பாதிப்பு 98 சதவீதம் குறைந்துள்ளது. நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை இல்லை. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலோடுதான் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடாது; சுற்றுலாவும் வளர்ச்சியடைய வேண்டும்; வேலைவாய்ப்பு பெருக வேண்டும் என்ற நோக்கில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. 

 

Whether it is a ban on New Year celebration or not pondicherry .. the CM and governor to confuse the people ..!


புதுச்சேரி மக்கள் இந்த புத்தாண்டை அமைதியாக கொண்டாட வேண்டும். அதேசமயம் விடுதிகளில் டி.ஜே நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவாசிகள் விடுதிகளில்  தங்கிச் செல்ல எந்தவித தடையும் இல்லை.  

 

உச்சநீதிமன்றத்தைக் காரணம் காட்டி கிரண்பேடி, புத்தாண்டு கொண்டாடத்தை நடத்தவிடாமல் தடுக்க முயற்சி செய்தார். பல மாதங்களாக கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்காமல், ஆளுநர் மாளிகையின் இரண்டாவது மாடியில் இருந்துகொண்டே அதிகாரிகளை மிரட்டும் பணிகளில் ஆளுநர் கிரண்பேடி ஈடுபடுகிறார். புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறையில்லாமல் எதிர்க்கட்சிகள் கிரண்பேடிக்கு ஜால்ரா போடும் கட்சிகளாக உள்ளன. பல்வேறு விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட்டு புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஆளுநர் கிரண்பேடி உருவாக்குகிறார். எனவே புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியோடும், கரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்தும் கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

“புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்படும்” என காவல்துறை இயக்குனர் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவஸ்தவா, துணைத் தலைவர் ஆனந்த் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “கடற்கரையில் புத்தாண்டு கொண்ட்டாங்கள் நடைபெறும்  என  புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதிய கரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருகிறது. எனவே, மத்திய அரசு அளித்துள்ள புதிய வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். புதுச்சேரி கடற்கரை சாலையில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகர பகுதியில் இன்று (31.12.2020) மதியம் 2 மணி வரை வாகனங்கள் இயல்பாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு வையிட் டவுன் பகுதியில் மதியம் 2 மணி முதல் நாளை (01.01.2021) காலை 9 மனி வரை கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

வையிட் டவுன் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் மூலம் பாஸ் வழங்கப்படும். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கிழக்கு கடற்கரை சாலை, மரக்காணம் சாலை, கடலூர் சாலை உள்ளிட்ட அனைத்து எல்லைகளிலும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுவர். கடற்கரை சாலைக்கு சுற்றுலா பயணிகள் வரும்போது, அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். கடற்கரை சாலை மற்றும் ஒயிட் டவுன் முழுவதும் சி.சி.டி.வி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். கடற்கரை சாலையில் மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்புடன் புத்தாண்டை கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

 

Whether it is a ban on New Year celebration or not pondicherry .. the CM and governor to confuse the people ..!

 
இதனிடையே “கரோனா காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதியளிக்கப்படாது. எனவே தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து கரோனாவைப் பரப்ப புதுச்சேரிக்கு வர வேண்டாம்” என கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதுடன், வெளியூர்களிலிருந்து புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகளைக் கண்காணிக்கும்படியும் கிரண்பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


வெவ்வேறான அறிவிப்புகளால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கம் போல இருக்காது என்கின்றனர் சுற்றுலாவாசிகள்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புத்தாண்டு கொண்டாட்டம்; 267 வழக்குகள் பதிவு

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
267 cases registered in night vehicle inspection ahead of New Year

2024 புத்தாண்டு கழிக்கும் வகையில் வேலூர் கோட்டையில் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டைக் கொண்டாடினர். நேற்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வந்து சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளும் தொடர்ந்து வந்ததால், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அந்த வகையில் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் விதமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் வேலூர் கோட்டை களைகட்டியது.

அதே சமயம், புத்தாண்டையொட்டி மாவட்டம் முழுவதும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டன. அப்போது, வேலூர் சரகத்தில் 112 வழக்குகளும், காட்பாடி சரகத்தில் 138 வழக்குகளும் மற்றும் குடியாத்தம் சரகத்தில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  மாவட்டம் முழுவதும் 267 வழக்குகள் பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 104 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

புத்தாண்டு ‘2024’; தலைவர்கள் வாழ்த்து!

Published on 31/12/2023 | Edited on 01/01/2024
New Year 2024 Greetings leaders

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று மாலை முதல் களைகட்டி வருகின்றன. இதனையொட்டி உலகின் முதல் நாடாக இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தை தொடர்ந்து உலகின் 2 ஆவது நாடாக ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. சிட்னி நகரில் மக்கள் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் இந்தியாவிலும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. கடற்கரைகள் போன்ற பொது இடங்களில் ஏராளமானவர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தலைவர்கள் பலரும் 2024 ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் “புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஒளிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. "எல்லார்க்கும் எல்லாம்" என்ற நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும். அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “2024 புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.‘புத்தாண்டு 2024’ நம் அனைவருக்கும் மேலும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொடுக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும். அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில் மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்திரராஜன், “நம் பாரத தேச மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு,புதிய ஆண்டின் தொடக்கமாக மட்டுமல்லாமல் புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாகவும் அமைய வேண்டும். இயற்கை சீற்றங்களால் நாம் சந்தித்த இடர்களைக் கடந்து 2024- புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராவோம். அன்பையும்,வாழ்த்துக்களையும் அனைவரோடும் பரிமாறிக் கொள்வோம். ஒற்றுமை உணர்வோடும் சமத்துவச் சிந்தனையோடும் பாரத தேசம் உலக அரங்கில் பீடுநடை போடும் வகையில் கடமையாற்ற உறுதி ஏற்போம். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும் அனைவரின் வாழ்விலும் நிறைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “ எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.புதிய ஆண்டில் போர்கள் ஓயட்டும்; அமைதி நிலவட்டும்; சகோதரத்துவம் பரவட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.