Skip to main content

எந்தெந்த இடங்களில் மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை? 

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

Where are the by-elections not held?

 

தமிழகத்தில் இன்று (04/03/2022) நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் கட்சிகள் வெற்றி பெற்றுள்ள இடங்கள் தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "21 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான தேர்தலில் 20- ல் தி.மு.க., ஒரு மாநகராட்சியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மாநகராட்சி துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலில் தி.மு.க.- 15, காங்கிரஸ்- 2, ம.தி.மு.க.- 1 இடத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. மாநகராட்சித் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலில் சிபிஐ, சிபிஎம், விசிக தலா ஒரு இடத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. 

 

138 நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் தி.மு.க.- 125, அ.தி.மு.க.- 2, காங்கிரஸ், ம.தி.மு.க., விசிக தலா ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 4 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளது. நகராட்சித் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் தி.மு.க.- 98, காங்கிரஸ்- 9, அ.தி.மு.க.- 7, ம.தி.மு.க.- 4, சிபிஐ, சிபிஎம், விசிக தலா- 2  இடங்களிலும், சுயேட்சைகள்- 3 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளது. 

 

489 பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கானத் தேர்தலில் தி.மு.க.- 395, காங்கிரஸ்- 20, அ.தி.மு.க.- 18, பா.ஜ.க.- 8 இடங்களிலும், சிபிஎம்- 3, ம.தி.மு.க., அ.ம.மு.க. தலா- 2 இடங்களிலும், சிபிஐ, விசிக, ம.ம.க. தலா 1 இடத்திலும், சுயேட்சைகள் 25 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளது.  

 

நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் 4 இடங்களில் நடைபெறவில்லை. நகராட்சித் துணைத் தலைவர் தேர்தலில் 11 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை. பேரூராட்சித் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் 13 இடங்களில் நடைபெறவில்லை. பேரூராட்சித் துணை தலைவருக்கான மறைமுகத் தேர்தல் 35 இடங்களில் நடைபெறவில்லை." இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.