Skip to main content

எப்போது மீண்டும் சந்திப்போம்? உணர்வுப் பூர்வமாக பிரிந்து பறந்த உறவுகள்!!!

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரவிய கரோனா, 30 ஆயிரம் உயிர்களை பலி வாங்கியுள்ளது. நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
 

 When will we meet again? Emotional Split Relationships !!!


இந்த நோய் பரவலைத் தடுப்பதற்காக ஒவ்வொரு நாடும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்துள்ளன. இதனால் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கும், மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஒர்க் பர்மிட் விசா வாங்கிக்கொண்டு வந்தவர்கள், படிக்க வந்தவர்கள், சுற்றுலா விசாவில் வந்தவர்கள், அதேபோல வெளிநாடு சென்ற இந்திர்கள் அனைவரும் அந்தந்த நாடுகளிலேயே சிக்கிக்கொண்டு உள்ளனர்.

இந்தியாவில் மட்டும் வெளிநாட்டு குடிமகன்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக திருவண்ணாமலையில் 100க்கும் அதிகமானவர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஜெர்மனியைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் சுற்றுலா விசாவில் வந்து இங்கே தங்கியிருந்தனர். அவர்கள் நாங்கள் சொந்த நாட்டுக்கு செல்ல எங்கள் நாட்டு தூதரகத்திடம் கேட்டுள்ளோம். அவர்கள் சென்னை வந்துவிடுங்கள் எனச்சொல்லியுள்ளார்கள். எங்களை சென்னைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என சில ஆவணங்களை காட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்களிடம் கேட்டனர். அவரும், அரசிடம் ஆலோசித்துவிட்டு பின்னர் பாதுகாப்பாக அனுப்பிவைத்துள்ளார்.

 

 When will we meet again? Emotional Split Relationships !!!


இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 13 பேர் சுற்றுலா விசாவில் வந்து திருவண்ணாமலையில் தங்கியிருந்தனர். அவர்கள் கரோனா வைரஸ் பரவல் பயத்தால் தங்களது சொந்த நாட்டுக்கு செல்வதாக மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நல்ல உடல்நிலையுடன் இருப்பதை உறுதி செய்துகொண்டு அவர்களை தனி வேன் மூலமாக காவல்துறை வாகன பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலமாக சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்க பிரான்ஸ் தூதரகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

 

 When will we meet again? Emotional Split Relationships !!!


திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள், திருவண்ணாமலையிலேயே தங்கியுள்ள தங்கள் நாட்டை சேர்ந்த உறவுகள் மற்றும் நண்பர்களிடம் விடை பெறும்போது கண்ணீர் விட்டு கட்டிப்பிடித்து அழுதனர். அதிலும் ஜான்சி என்கிற பிரான்ஸ் நாட்டு பெண், தனது காதலர் தன்னை விட்டு தாயகம் திரும்புவதை நினைத்து கட்டிப்பிடித்து அழுதார். நாம் அடுத்து எப்போது சந்திப்போம் என தெரியவில்லை. நீ பாதுகாப்பாக இங்கேயே இரு என ஜான்சியின் காதலர் ஜான்சியிடம் கட்டிப்பிடித்தபடி சொன்னார். இப்படி 3 ஜோடிகள் தங்களது பிரிவை நினைத்து கலங்கினர். இது அங்கிருந்த காவலர்களையே கலங்க வைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.