Skip to main content

என்ன எச்.ராஜா? -எஸ்.எஸ்.சிவசங்கரின் கண்டன அறிக்கை!!

Published on 16/12/2018 | Edited on 16/12/2018

 

தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களையும், சர்ச்சைக்குரிய ட்விட்களையும் வெளியிட்டு வரும் பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா தற்பொழுது மறைமுகமாக கலைஞர் சிலை திறப்பு விழாவை சாடும் வகையில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ் எஸ் சிவசங்கர் தனது கண்டன அறிக்கையில் ,

 

"உயிரற்ற படேலுக்கு சிலையா என்று நேற்று கேள்வி எழுப்பினார்கள் நாளை?", இந்த அறிவார்ந்த கேள்வியை பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட் செய்துள்ளார்.

 

நாளை தலைவர் கலைஞருக்கு சிலை திறக்கும் கொண்டாட்டத்தில் தி.மு.க தோழர்கள் இருப்பதை பார்த்த வயிற்றெரிச்சலில் இப்படி வாந்தி எடுத்திருக்கிறார். 

 

sss

 

படேல் சிலை நிறுவப்பட்டதற்கும், கலைஞர் சிலை நிறுவப்படுவதற்குமான வித்தியாசத்தை தி.மு.கவின் தொண்டர்கள் அதே ராஜாவின் பதிவில் பதில் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

படேல் சிலை மத்திய அரசு, மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு நிறுவியது. தலைவர் கலைஞர் சிலை திராவிட முன்னேற்றக் கழக செலவில் நிறுவப்பட்டுள்ளது.

 

மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்த பிரதமரை கேள்வி கேட்க சாதாரண குடிமகனுக்கும் உரிமை உண்டு. அந்த அடிப்படையில் தான், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கவிஞர் கனிமொழி கேள்வி எழுப்பினார்.

 

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு இழப்பீடு வழங்க மோடி அரசுக்கு மனமில்லாமல் போனது தான் பட்டேல் சிலை செலவீனம் குறித்த விமர்சனத்தை கிளப்பியது. இது கவிஞர் அவர்களின் கேள்வி மாத்திரம் அல்ல. தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனின் உள்ளக் குமுறலும் கூட.

 

இந்த புரிதல் கூட இல்லாமல் எச்.ராஜா கேள்வி கேட்பதாக சிலர் நினைக்கலாம். புரிந்தே கேட்பது தான் ராஜாவின் பாணி. திசை திருப்பலுக்காக அவ்வப்போது இது போன்று முட்டாள்தனமாக பிதற்றுவது எச்.ராஜாவின் வேலை.

 

சில நாளிதழ்கள் இது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். அதில் பலரும் ஏமாறுவது உண்டு, அவர்கள் நடுநிலையாளர்கள் என்று நினைத்து. 

 

ஆனால் எச்.ராஜா சமீபகாலமாக இது போன்ற வேலைகளை செய்வதை சின்னக் குழந்தையும் அறியும். 

 

அதைத் தான் மதன்கார்க்கியும், சிம்பும் "பெரியார் குத்து" பாடலில் வெளிப்படுத்தி இருக்கிறாரநிலைமை 

"கிழவன் சிலைய உடைக்கும்

கழுத என்ன செஞ்சு கிழிக்கும்

அந்த பழைய நெருப்ப திருப்பி

கிளப்பி குழம்பி நின்னு முழிக்கும்"

 

ஏற்கனவே தந்தை பெரியார் சிலையை உடைக்க கிளம்பி ராஜா மூக்குடைப்பட்டதை தான் சொல்கிறார்கள். 'கழத' என்ற அன்பான அழைப்பு.

 

பாடலின் இறுதியில் தான் செம அடி.

 

"உண்மையான நாயி

அது நன்றியோட கிடக்கும்

அட வேஷம் போட்டு வந்த நாயி

மானங்கெட்டு குலைக்கும்"

 

சரியா தான் சொல்லியிருக்காங்க, வேஷம் போட்டு வந்த நாயி மானம் கெட்டு குலைக்கும். சிறப்பு.

 

இது யாருக்கானது என்று புரியாமல் போய் விடக் கூடாது என்று தான், கடைசியாக சிம்பு 'சொல்லி' அடிக்கிறார்.

 

"என்ன ராசா"

 

மிஸ்டர் எச்.ராஜா அவர்களே எங்கள் தலைவர் தளபதி அவர்களை டேக் செய்து ட்விட் செய்திருக்கிறீர்களே, அங்கே தம்பி சிம்பு நேராகவே 'பாடிவிட்டார்'. 

 

வரி கொடுத்த சனங்க, எங்க பணத்தில் படேல் சிலை வச்சிருக்கிறீயேன்னு கேட்டா, தி.மு.க காசுல, நாங்க எங்க தலைவருக்கு சிலை வைக்கிறத்துக்கு கேள்வி கேட்கிறீங்க.

 

அய்யா வெற்றிகொண்டான் மாதிரி கேள்வி கேட்டுடுவேன். ஆனா உங்க நிலைமை ரொம்ப மோசமாயிடும்.

 

எங்கள் தலைவரை நாங்கள் நேசிக்கிறோம். மறைந்தாலும் எங்கள் நெஞ்சம் எல்லாம் நிறைந்திருக்கிறார். அதனால் கொண்டாடுகிறோம். "சொந்த காசில்", சிலை வைக்கிறோம். 

 

கிராமத்தில் சொல்வதை நினைவூட்டுகிறேன்.

 

"கொடுத்து வச்ச மகராசி வயிற்றில் சுமக்கிறா. உன் வயிற்றில வளருல்லன்னா, ஏன் அம்மி குழவிய எடுத்துக் குத்திக்கிற?"

 

அதையே தான் கேட்கிறேன்.

 

# என்ன எச்.ராசா ?

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ச்சையில் சிக்கிய ஆ. ராசா; பா.ஜ.க கடும் கண்டனம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
BJP strongly condemned on A. Rasa, caught in controversy again

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசினார்.

அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் எனக் கருதி உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா, சமீபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியா ஒருபோதும் ஒரு நாடாக இருந்ததில்லை. இந்தியா ஒரு துணைக் கண்டம். தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்று பிரதமர் கூறுகிறார். தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால், இந்தியா இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழ்நாடு தனியாகப் போய்விடும். 

நீங்கள் சொல்லுகின்ற ஜெய் ஸ்ரீராமையும், ‘பாரத் மாதா கி ஜே’யையும் நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று கூறியிருந்தார். இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

ஆ. ராசாவின் பேச்சுக்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “இந்தியாவின் அடையாளத்தை இழிவுபடுத்துவதும், இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் இந்து கடவுள்களை அவமதிப்பதும் இந்தியா கூட்டணியின் அரசியல் செயல்திட்டமாக மாறி வருகிறது. ஆ. ராசாவின் இத்தகைய கருத்துகளுடன் உடன்படுகிறார்களா? என்பதை காங்கிரஸும், இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சொல்ல வேண்டும்” என்று கூறினார். 

Next Story

மலைப்பகுதியில் ‘விடியல் பயணத் திட்டம்’ தொடக்கம் 

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Dawn Trip begins in hills

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 19 ஆம் தேதி (19.02.2024) தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில், “அரசு நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் மகளிருக்கான 'விடியல் பயணம்’ திட்டம் நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவிக்கையில், “மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் பிப்ரவரி 25 ஆம் தேதி உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் மலைப்பகுதியில் மகளிருக்கான விடியல் பயணத்தினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுடன் அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், திமுகவினர், தொ.மு.ச நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.