Skip to main content

300 அடி உயரத்திலிருந்து பெயர்ந்து விழுந்த ராட்சத பாறை - இடிபாடுகளில் சிக்கியவர்களின் கதி என்ன? 

Published on 15/05/2022 | Edited on 15/05/2022

 

What is the fate of those trapped in the giant rock fall that shifted from a height of 300 feet?

நெல்லை அருகே கல்குவாரியின் ராட்சத பாறைகள் 300 அடி உயரத்திலிருந்து பெயர்ந்து விழுந்ததால் இடிபாடுகளில் 6 பேர் சிக்கிக் கொண்ட சம்பவம் மாவட்டத்தில் திகிலைக் கிளப்பியுள்ளது.

 

நெல்லை மாவட்டத்தின் முன்னீர்பள்ளம் காவல் லிமிட்டில் வருகிற பொன்னாக்குடி கிராமத்தின் பின்பக்கமுள்ளது அடைமிதிப்பான் குளம். இங்குள்ள குன்றின் கல்குவாரியை எடுத்திருப்பவர் சங்கர். கல்குவாரியின் பாறைகளை வெடிவைத்து தகர்த்து, அதனைக் கிரஸ்ஸர் மூலம் பல சைசிலான ஜல்லிக் கற்கள் தயார் செய்வதுடன் எம்சாண்ட் தயாரிக்கவும், அனுப்பப்படுவதால் அந்தக் குவாரியில் இரவு பகல் என்று தொழிலாளர்கள் பணியிலிருந்திருக்கிறார்கள்.

 

இதனிடையே நேற்று (14/05/2022) வழக்கம் போல் இரவு நேரம் விதிகளை மீறி பாறைகளைப் பிளப்பதற்காக கல்குவாரியில் அடிப்புறத்தின் பல இடங்களில் துளையிட்டு கனமான அளவு வெடி வைத்து தகர்த்திருக்கிறார்கள். வெடியின் தாக்கம் பாறையின் 300 அடி உயரமுள்ள உச்சிப்பகுதி வரை ஊடுருவியிருக்கிறது என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. வெடிவைத்த பின்பு இரவு சுமார் 12.00 மணியளவில் சிதறிய பாறைகளின் கற்களை அள்ளி லாரிகளில் லோடு செய்கிற பணியில் மூன்று பெரிய ஹிட்டாச்சிகள் மற்றும் அதனைக் கொண்டு செல்வதற்காக மூன்று லாரிகளும் பணியிலிருந்திருக்கின்றன. 

What is the fate of those trapped in the giant rock fall that shifted from a height of 300 feet?

அதுசமயம் 300 அடி உயரத்திலிருந்து பெரிய பாறை திடீரென்று சரிந்து கீழே பணியிலிருந்த ஹிட்டாச்சிகள் மற்றும் லாரிகளின் மீது விழுந்து அமுக்கியிருக்கிறது. தொடர்ந்து பாறைகள் சரிந்து விழுந்ததில் அவை சிக்கிக் கொண்டன. அதோடு மூன்று ஹிட்டாச்சிகளின் 3 ஆபரேட்டர்கள், மூன்று லாரி டிரைவர்கள் என 6 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனராம். இதுகுறித்த தகவலறிந்த மறுகணம் நடு இரவு 12.30 மணியளவில் மாவட்ட எஸ்.பி.யான சரவணன் முன்னீர்பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தினர்.

 

மாவட்டத்தின் தீயணைப்பு மீட்புப் படையினரும் தீவிரமாகச் செயல்பட்டு இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் காயமடைந்த முருகன், விஜய் 2 பேரை மீட்டனர். மற்றவர்களை மீட்பதற்கு விழுந்த பாறைகள் தடையாய் இருப்பதால் அதனை அப்புறப்படுத்த தூத்துக்குடியிலிருந்து ராட்சத இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. உயரத்திலிருந்து பாறைகள் தொடர்ந்து விழுந்துகொண்டிருப்பதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டு தற்காலிகமாக மீட்பு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களில் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரக்கோணத்திலிருந்து ஆய்வாளர் விவேக் ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான தேசிய மீட்புப் படையினர் வந்து கொண்டிருக்கின்றனர். விரைவில் மீட்டுவிடுவோம் என்கின்றனர் ஸ்பாட்டிலுள்ள காவல் துறை அதிகாரிகள்.

 

விதிப்படி, ஒவ்வொரு 15 மீட்டர் ஆழத்திற்கும் பாதை போன்ற ரேம்ப் அமைக்க வேண்டும். அப்படி அமைக்கும்பட்சத்தில் திடீரென்று விழுகிற பாறைகள் அதன் மேல் விழுந்து விடும். தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். தொழிலாளர்களும் தப்பித்துவிடுவார்கள். ஆனால் அப்படி அமைக்கப்படாமல் விதியை மீறி 300 அடிக்கு கீழே போயிருக்கிறார்கள். இதற்கு யார் அனுமதித்தார்கள். மேலும் தற்போது மைன்ஸ் துறையினர் குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டிய காலமிது. அவர்கள் முறைப்படி ஆய்வு செய்திருந்தால் இத்தனை பெரிய விபத்து ஏற்பட்டிருக்காது என்கிறார்கள் ஏரியாவாசிகள்.

What is the fate of those trapped in the giant rock fall that shifted from a height of 300 feet?

இந்த விபத்து பற்றி அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காயம்பட்ட இருவருக்கும் உடனடியாக தலா ரூபாய் 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

 

கல்குவாரிகளின் விதிமீறலே விபத்திற்கு காரணம் என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.