Skip to main content

''நீ என்ன தொடாத... நீதான் என்ன சாவ சொன்ன...'' -நீதிமன்ற வாசலில் கைதியின் அலப்பறை!

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

'' What did you touch ... what did you say to  ... '' - Prisoner's at the court door!

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கைதி ஒருவர் விசாரணை முடிந்து காவல் வாகனத்தில் ஏற மறுத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

கடந்த வாரம் விசாரணைக் கைதி ஒருவர் போலீசாரிடம் 'டீ வாங்கி தரியா... இறங்கி ஓடி விடவா... முடிந்தால் என்னை சுட்டுப் பாருங்க'' என குதர்க்கமாக வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

 

கன்னியாகுமரி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது வழக்கம். அதன்படி அண்மையில் போலீஸ் வேனில் கைதிகளை ஏற்றிக்கொண்டு ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தனர். அந்த கைதிகள் கூட்டத்திலிருந்த போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திங்கள்சந்தை பகுதியைச் சேர்ந்த தனிஷ் என்ற இளைஞர், நடுவழியில் போலீசாரிடம் டீ வாங்கி கொடுக்க சொல்லி  அடம் பிடித்துள்ளார். அப்பொழுது போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர், போலீசார் வைத்திருந்த துப்பாக்கியை தொட்டு ''இந்த துப்பாக்கியில் குண்டு இருக்கா அண்ணா... லோடு பண்ணிருக்கியா... நாவேணா வண்டியை விட்டு இறங்கி ஓடுறேன் முடிஞ்சா என்ன சுடுங்க...'' என அலப்பறையில்  ஈடுபட்டான். ஆனால் பாதுகாப்பு கருதி நடுவழியில் வண்டியை நிறுத்தி டீ குடிக்க முடியாது என்று தெரிவித்த போலீசார், சிறைக் கைதியின் அலப்பறைக்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவனைச் சமாதானப்படுத்த முயன்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

 

police

 

இந்நிலையில் அதே கைதி கடந்த 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காவல் வாகனத்தில் ஏற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் காவல் வாகனத்தின் சக்கரத்தில் தலையை மோதி காயம் ஏற்படுத்திக்கொண்ட கைதி தனிஷ்,  ''நீங்க தான் அண்ணா இதுக்கு காரணமே...'' எனக்கூற போலீசார் ''அட வாடா...'' என கையை பிடித்து எழுப்ப,  ''அண்ணா நீ என்ன தொடாத... நீதான் என்ன சாவுன்னு சொன்ன.... நீ தொட்டா பெரிய பாவம் அண்ணா...'' என அலப்பறையில் ஈடுபட்டான். அதனைத்தொடர்ந்து போலீசார் சமாதானப்படுத்தி கைதி தனிஷை அழைத்துச் சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.