Skip to main content

சசி வரவேற்பு... பரபரக்கும் அ.ம.மு.க!

Published on 24/01/2021 | Edited on 25/01/2021

 

Welcome Sasi ... Exciting AMMK!

 

கர்நாடகாவில் கரோனா சிகிச்சையிலிருக்கும் சசிகலா வரும் 27ம் தேதி ரிலீஸ் ஆகிறார் என்பது உறுதியானதும் அவரை வரவேற்க டி.டி.வி.யின் அ.ம.மு.க. அதிதீவிரத்திலிருக்கிறது.

 

சசி விடுதலை பற்றிய சர்ச்சைகள் கிளம்பிய நேரத்தில் தனி விமானத்தில் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்துவிட்டு வந்த டி.டி.வி. தினகரன், அதன் பின் சைலண்ட் ஆனவர், தற்போது வெளியேவரும் சசியை வரவேற்க தனது அமைப்பினரை ஸ்பீட் படுத்தியிருக்கிறார்.

 

தமிழகம் முழுக்கத் தனது அ.ம.மு.க. சார்பில் சுமார் ஒரு லட்சம் பேர்களைத் திரட்டிக் கொண்டு, கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி, மற்றும் வேலூர் பகுதிக்கு வரப் பணித்திருக்கிறார். கர்நாடக எல்லை தொடங்கி சென்னை வரை இடையில்லா தொடர் வாகனமிருக்க வேண்டும். அப்படி ஒரு மாஸ் காட்டினால் தான் சசிக்கான கிரேஸ் உயரும். கட்சி, அவரின் வசமிருக்கிறது என்கிற பிம்பம் உண்டாகும் என்பது திட்டமாம்.

 

Welcome Sasi ... Exciting AMMK!

 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி வ.தெ.மாவட்டச் செ.க்களான பரமசிவ ஐயப்பன், பொய்கை மாரியப்பன், மனோகரன் மற்றும் பிரைட்டர் ஆகியாரின் கூட்டத்தில் தொகுதிக்கு கணிசமான எண்ணிக்கையிலான வாகனத்தில் கட்சியினரைத் திரட்டிக் கொண்டு வேலூர் எல்லைக்கு வரவேண்டும் என்று அ.ம.மு.க தென்மண்டல அமைப்பாளரான மாணிக்கராஜா தெரிவித்திருக்கிறார். எங்களின் நிலவரப்படி லட்சம் பேர் திரளுவார்கள், அதில் அ.தி.மு.க.வினரும் வருகிறார்கள் என்கிறார் நெல்லை மாவட்ட அ.ம.மு.கவின் பொருளாளரான பால்கண்ணன்.

 

தென்மண்டலத்தின் ஒவ்வொரு சட்டமன்றத்திலிருந்தும். 30 வாகனங்களுக்கும் குறையாமல் வர வேண்டுமென்ற ஏற்பாடுகளுக்கு அ.ம.மு.க.வின் தலைமையிலிருந்து செலவு தொகைகள் தரப்பட்டு வரவேற்பு அணிவகுப்புக்குக் கொண்டு வரப்படும் வாகனங்களின் ரெஜிஸ்ட்ரேசன் நம்பர்கள் அ.ம.மு.க.வின் தலைமைக்குத் தரப்பட்டுள்ளதாம்.

 

அ.தி.மு.க.விலிருக்கும் சசிகலாவின் ஆதரவாளர்களும் அவரை வரவேற்க கர்நாடகா எல்லைக்குச் செல்லவிருப்பதான தகவல்கள் கூட உளவுப் பிரிவின் மூலம் மேலே போயிருக்கின்றனவாம். குறிப்பாக தூத்துக்குடியின் 60 வார்டு செ.க்களில் 27 வார்டு செ.க்கள் அ.ம.மு.க. வசம் சென்றுவிட்டதால் அவர்களின் வழியாகவும் சசி வரவேற்பு ஏற்பாடுகள் நடக்கின்றன.

 

Welcome Sasi ... Exciting AMMK!

 

ஜன 27 அன்று சசிகலாவை வரவேற்க தொண்டர்களின் கூட்டம் கர்நாடகா எல்லை செல்வதையறிந்தே, அதற்கு கட்சியினர் சென்றுவிடாதவாறு அணை போடும் வகையில்தான் அ.தி.மு.க.வின் தலைமை, அன்றைய தினம் ஜெ வின் மணிமண்டபம் திறப்பு நிகழ்ச்சிக்கு கனத்த ஏற்பாடுகளைச் செய்திருக்கிறதாம். அன்றைய தினம் தமிழகத்திலிருந்து சென்னைத் திடலுக்கு கூட்டத்தைத் திரட்டிக் கொண்டு  வரவேண்டும் என்று அ.தி.மு.க.வின் கட்சித் தலைமையில் ஜன 21ம் தேதி நடந்த மா.செ.க்களின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு அதற்கான செலவு கரன்சிகளும் கைமாறப்பட்டுள்ளது என்கிற தகவல்களும் இலைத்தரப்பினரிடமிருந்து வருகின்றன.

 

ஜன 27ல் சென்னை கர்நாடக எல்லைகளின் மூச்சே திணறலாம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.