Skip to main content

இந்திய பிரதமர்- சீன அதிபர் சந்திப்பு வரவேற்கத்தக்கது -திருமாவளவன் எம்பி பேட்டி!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக விருந்தினர் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி மகாபலிபுரத்தில் இந்திய பிரதமர் நரந்திரமோடி மற்றும் சீன அதிபர் தோழர் ஜின்பிங் சந்திப்பு வரவேற்கதக்கது என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை மீட்க தமிழக அரசு ஒரு ஆணையத்தை அமைத்து மீட்க வேண்டும். பிரதமர் மோடி - சீன அதிபர் தமிழகத்தில் மகாபலிபுரத்தில் சந்திக்கும் நிகழ்ச்சியால் எல்லையோர சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ள நிலையில் இந்த சந்திப்புத உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.

 

Welcome the Meeting of  Indian Prime Minister and Chinese Chancellor - Tirumavalavan MP Interview!

 

கீழடியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் தமிழ் சமூகத்தின் தொன்மையை பறை சாற்றுகின்றது. 5 கட்ட அகழாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட அகழ்வாய்வுக்கு மத்திய அரசை நம்பி அகழ்வாய்வு செய்யக்கூடாது.  நிதியை தமிழக அரசே ஒதுக்க வேண்டும். கீழடியிடில் கிடைத்த பொருள்களை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் என்எம்ஆர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் படிக்கும் தலித் சமூக மாணவர்களிடம் கட்டாய கட்டண வசூல் செய்யக்கூடாது. இங்கு படிக்கும் தலித் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு திட்டத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகிறது. இதனை கைவிடவேண்டும். அரசு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்ட பிறகும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சிதம்பரம் உள்ளிட்ட டெல்டா பாசனப் பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் நிதி முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவர்,

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளேன். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

வருகிற 13-ம் தேதி கடலூரில் விசிக சார்பில் உலக சாதனை நிகழ்வாக பனைவிதைகளை கொண்டு எனது முக வடிவத்திலும் அம்பேத்கார் முகவடிவத்திலும்  பனைமுகம், திருமுகம் என்ற நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுகிறது. இதில் 10 ஆயிரம் பனை விதைகளை நடும் திட்டமும், 3 ஆயிரம் இளைஞர்களை கொண்டு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி பை  பயன்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படும்.

 

vck


பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர், பதிவாளர் பணியிடங்களுக்கு தலித், சிறுபான்மையினர், பெண்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நெய்வேலி கங்கைகொண்டான் பகுதியில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த குற்றவாளியை தமிழக அரசு விரைந்து கைது செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதிக்கு தருவது போன்று கடலூர், அரியலூர் மாவட்டங்களில்  வாய்க்கால்களை தூர்வாரிட சிறப்பு நிதியை தமிழக அரசு அளிக்க வேண்டும். ராதாபுரம் தொகுதியில் நடந்த முறைகேட்டைப் போலவே காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை தொகுதியிலும் நடந்துள்ளது. ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டதைப் போலவே காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மறு வாக்கு எண்ணிக்கைக்கு நீதிபதி உத்தரவிடுவார் என நம்புகிறேன் என கூறினார். 

இவருடன் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் அறவாழி, மாநில நிர்வாகிகள் தாமரைசெல்வன், செல்லப்பன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.