Skip to main content

ஹெல்மெட் போட்டால் சாக்லெட் தருவாங்க! நாமக்கல் போலீசார் நூதன விழிப்புணர்வு!!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து காவல்துறையினர் தற்போது நூதன முறைகளில் வி-ழிப்புணர்வு பரப்புரை செய்யத் தொடங்கி விட்டனர். சாலை விபத்துகளினால் உயிரிழப்போரில் மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்து, தமிழகம்தான் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பெரும்பாலான சாலை விபத்துகளின்போது தலையில் அடிபடுவதாலேயே மரணம் சம்பவக்கிறது என்கின்றன ஆய்வு முடிவுகள்.


நடந்து செல்வோரைக் காட்டிலும், மோட்டார் சைக்கிளில் செல்வோரே அதிகளவில் விபத்துகளில் சிக்குகின்றனர். ஆக, சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிர்சேதத்தைக் கட்டுப்படுத்த ஹெல்மெட் எனும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. என்னதான் உயர்நீதிமன்றமும், காவல்துறையும் தலையில் குட்டி குட்டிச் சொன்னாலும், சாலையை தரமாக போட்டார்களா? என அரசை குறை சொல்வதும், தீர்ப்பு அளித்த நீதிபதி காரில் செல்லும்போது முதலில் சீட் பெல்ட் போடட்டும்...அப்புறம் நாங்கள் ஹெல்மெட் அணிகிறோம் என்று சாக்குப் போக்குச் சொல்லி நீக்குப்போக்காக தப்பிக்கும் வாகன ஓட்டிகளும் உள்ளனர்.

wear helmet police has give chocolate namakkal district

அதையும் மீறி வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு வழக்குப்பதிவு செய்தால், சமூக வலைத்தளங்களில் அவர்களையே குற்றவாளியாக்கி பதிவிடும் போக்கும் அதிகரித்து வருகிறது. சேலம் மாநகர காவல்துறையினர், ஹெல்மெட்டின் அவசியம் குறித்து வேறு ஒரு நூதன வழிமுறையைப் பின்பற்றுகின்றனர்.


மாநகரில் இரண்டு முக்கிய சாலைகளில் செல்ல வேண்டுமெனில் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வந்தால்தான் செல்ல முடியும். இல்லாவிட்டால், அந்த வாகன ஓட்டிகள் வந்த வழியிலேயே திருப்பி விடப்படுவர். இந்த திட்டத்திற்கு பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.


இது ஒருபுறம் இருக்க, நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறையினர், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவோருக்கு சுவையான சாக்லெட்டுகள் வழங்கி உற்சாகப்படுத்தும் நூதன வழிமுறையைப் பின்பற்றுகின்றனர். நாமக்கல்லிலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதில் காவல்துறையினர் தீவிரமாக இருந்தாலும், ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்களில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் ஹெல்மெட் போடாமல் அலட்சியமாக வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்தும் பொதுவெளியில் வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


இந்நிலையில்தான், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், திங்கள்கிழமை (பிப். 3) முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டார். 


இதுதொடர்பாக அவர் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பி இருந்தார். இதையடுத்து, திங்கள் கிழமை காலையில், ஆட்சியர் அலுவலக முதன்மை நுழைவு வாயில் அருகே மாவட்ட காவல்துறை எஸ்பி அருளரசு, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், இளமுருகன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 


அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்து தடுத்து நிறுத்தினர். அவர்களை ஹெல்மெட் அணிந்து வரும்படி வற்புறுத்தினர். அதையடுத்து ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை பாராட்டி, அவர்களுக்கு காவல்துறை எஸ்பி சுவையான சாக்லெட்டுகளை வழங்கினார். 


வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கையையும் விநியோகம் செய்தனர். இந்த சிறப்பு வாகனத் தணிக்கை 45 நிமிடங்கள் நடந்தது. சாக்லெட் வழங்கி ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையின் நூதன உத்திக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.