Skip to main content

"எங்களையும் அரசு ஊழியராக்க வேண்டும்" - தமிழக அங்கன்வாடி ஊழியர்கள்

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

"We too should be made government employees" - Tamil Nadu Anganwadi workers

 

தமிழக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக முழுவதும் தமிழக அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட கிளைகளில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் 54,437 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அதில் 1 லட்சத்தி 4 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.  

 

‘எங்களுக்கு அரசு பணியில் இருப்பதாக அரசு வழங்கும் எந்த சலுகைகளும் கிடைப்பதில்லை, அதேபோல் அரசிடமும் எங்களுக்கான அரசு ஊழியருக்கான எந்த பயனும் கிடைப்பதில்லை, நாங்கள் யார்’ என்று போராட்டத்தில் கேள்வியை எழுப்பினர். பிறகு மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர். 

 

இவர்களுக்கு ஆரம்பகட்ட மாத ஊதியமாக 7,700 முதல், 30 வருடம் பணிபுரிந்த பிறகு 12 ஆயிரம்வரை கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முறையான வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் அங்கன்வாடி ஊழியருக்குப் பணி கொடையாக 10 லட்சம் ரூபாயும் உதவியாளருக்கு 5 லட்ச ரூபாயும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

 

"We too should be made government employees" - Tamil Nadu Anganwadi workers

 

இந்தப் போராட்டம் சென்னையில் மட்டும் 12 இடங்களில் நடைபெற்றது. அதில் முதல் போராட்டம் கிண்டியில் தொடங்கி புழல்வரை நடைபெற்றது. இது தொடர்பாக பேசிய அங்கன்வாடி மாநில பொதுச்செயலாளர் டெஷி, “எங்களது இந்த மூன்று கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எங்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சமூகநலத்துறை அமைச்சர் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதே இல்லை, நாங்கள் அரசு சொல்லும் அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம். 

 

அரசு பணி என்றுதான் பெயர், ஆனால் எந்த பயனும் இல்லை. ‘அங்கன்வாடி ஊழியர்களுக்கு 21 ஆயிரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 18 ஆயிரமும் மாத சம்பளமாக வழங்க வேண்டும்’ என்று தமிழக முதல்வர் அறிவித்தால் போராட்டத்தை நிறுத்திக்கொள்வோம். இல்லையேல் எங்களின் போராட்டம் தொடரும்” என்றார். இது தொடர்பாக பேசிய அங்கவன்வாடி இயக்குனர் கவிதாராமு “அவர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுகொண்டோம். கூடிய விரைவில் அவர்களுக்கான நம்பிக்கைக்குரிய பதில் கிடைக்கும்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.