Skip to main content

'3 மாதத்தில் 31 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தினோம்' - குழந்தைகள் நலத் தலைவர்!

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

'We stopped 31 child marriages in 3 months'-regretted child welfare chief

 

தமிழ்நாட்டில் இன்று ஆசிரியர் தின விழா வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடப்பட்டது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழாவை மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்யராஜ் உள்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடைகள் அணிவித்து புத்தகங்களை பரிசாக கொடுத்து கொண்டாடியதுடன் ஒரு கருத்தரங்கத்தையும் நடத்தினார்கள்.

 

புதுக்கோட்டை மாவட்ட நாணயவியல் கழகம் எஸ்.டி.பஷீர் அலி காலை முதல் மதியம் வரை பல நாட்டு நாணயங்கள், பணத் தாள்கள், அஞ்சல் வில்லைகளை கண்காட்சியாக வைத்திருந்தார். காசு பணத்திற்காக எல்லாரும் தேடிப் போகிறார்கள். ஆனால் நாங்கள் பலநாட்டு நாணயங்களையும் ஒரே இடத்தில் காண முடிந்தது என்றனர் மாணவ, மாணவிகள்.

 

மாலையில் நடந்த ஆசிரியர் தின கருத்தரங்கத்தில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் சதாசிவம் மற்றும் அறிவியல் இயக்கம் அறிவொளி கருப்பையா, கிராம நிர்வாக அலுவலர் ராஜா, ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மாணவிகளே தொகுத்து வழங்கினார்கள். மாணவ, மாணவிகளின் நடனம், கலை, இலக்கியம், பேச்சுகளோடு நடந்தது.

 

மாணவ, மாணவிகள் மத்தியில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சதாசிவம் பேசும் போது,

 

'We stopped 31 child marriages in 3 months'-regretted child welfare chief

 

''இன்று ஆசிரியர் தினம் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். விண்ணப்பித்து பெறுவதல்ல நல்லாசிரியர் விருது. தங்களின் நல்ல வேலையை பார்த்து கொடுக்க வேண்டும். இன்று நீங்கள் ஆசிரியர்களை கௌரவித்தது போல மாணவர்கள் ஆசிரியர்களை கௌரவிப்பதே உண்மையான விருது.

 

உலகில் புனிதமான இடங்கள் இரண்டு. ஒன்று  தாயின் கருவறை. நமக்கு உயிர் கொடுக்கும் இடம். மற்றொன்று வகுப்பறை நல்ல அறிவைக் கொடுக்கிறது. மூன்றாம் பாலினத்தவர்களை பல்வேறு பட்டப் பெயர்களை சொல்லி அழைத்து அவர்களை அவமானப்படுத்தினார்கள். இதையெல்லாம் சகிக்க முடியாத கலைஞர்  முதலமைச்சராக இருந்த போது மூன்றாம் பாலினத்தவர்களை கௌரவமாக அழைக்க வேண்டும். அவர்களுக்கும் உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்று '2008 ஏப்ரல் 15 திருநங்கையர் தினம்' என்று கலைஞர் அறிவித்தார்.

 

அன்று முதல் மூன்றாம் பாலினத்தவர்கள் திருநங்கைகளாக அழைக்கப்படுகிறார்கள். புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் என்ற உயர்ந்த பொறுப்பை ஒப்படைத்தார்கள். அதன் மூலம் கடந்த 3 மாதத்தில் 31 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறோம். பொன்னமராவதி பகுதியில் அதிகமான குழந்தை திருமணங்கள் நடக்கிறது. குழந்தைகள் திருமணத்தை மாணவ, மாணவிகள் தடுக்க வேண்டும். அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் உடனே இலவச தொலைப்பேசி எண் 1098 க்கு சொல்லலாம். மேலும் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்கள் ஏற்படும் போது ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் நலக்குழுவிடம் தெரிவிக்க வேண்டும்'' என்றார்.

 

நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.