Skip to main content

‘30 நாட்களில் தீர்வு காண வேண்டும்... உறுதி அளித்த அதிகாரிகள்’- அமைச்சர் பேச்சு!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

We have to find a solution in 30 days ... Officials who have given assurances

 

நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாச்சலம், திட்டக்குடி, பெண்ணாடம், ஆகிய இடங்களில் ஒரே நாளில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமை கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான சி.வி. கணேசன் நடத்தி அசத்தியுள்ளார். ஒவ்வொரு முகாமிலும் காலையிலிருந்தே அதிகாரிகள் அங்கு வரும் மக்களிடம் மனுக்களைப் பெற்று பெட்டியில் போடுவதற்கு பெட்டிகள் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அந்த மனுக்களை அந்த பெட்டியில் கொண்டு வந்து போட்டுக்கொண்டிருந்தனர்.

 

நெல்லிக்குப்பத்தில் 12 மணி அளவில், பண்ருட்டியில் 2 மணி அளவில், விருத்தாசலத்தில் 3மணி அளவில், பெண்ணாடத்தில் 4 மணி அளவில், திட்டக்குடியில் கடைசி என ஐந்து இடங்களில் மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போடுவதற்கு என்று தனியாக பெட்டிகள் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன. மனு கொடுக்க வந்த மக்கள் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை அந்தப் பெட்டியில் சேகரித்தனர். இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களில் அமைச்சர் கணேசன், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், வருவாய் துறை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங், விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார், கூடுதல் ஆட்சியர் பவன்குமார், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய வருவாய் வட்டாட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

We have to find a solution in 30 days ... Officials who have given assurances

 

இந்த முகாம்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். திட்டக்குடி முகாமில் பேசிய அமைச்சர், " தமிழக முதல்வர் பதவியேற்று 100 நாட்களில் 1200 திட்டங்களை நிறைவேற்றி உள்ள ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் இந்தியாவிலேயே விவசாயிகளுக்காக தனி பட்ஜெட் அறிவித்த முதல்வர் ஸ்டாலின் தான். மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது இரண்டு மாதங்களில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். முதல்வர். ஆனால் தற்போது பெறப்பட்டுள்ள இந்த மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளேன்.

 

அவர்களும் உடனடியாக தீர்வு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக சிறந்து விளங்கும் தமிழகத்தை முதல் மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதே முதல்வரின் இலக்கு. மேலும் மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கு எப்போதும் தயாராக இருக்கிறோம்" என பேசினார். நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.