Skip to main content

2 நாள் தொடர் மழை; திடீரென இடிந்து விழுந்த வீட்டின் சுவர்

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

wall house that suddenly collapsed due rain

 

2 நாட்களாகத் தொடர் மழையால், திடீரென வீட்டின் மீது தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் குடியிருப்பு வாசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்,  நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் இருக்கும் 20 வருடப் பழமையான தடுப்புச் சுவர் திடீரென குடியிருப்பு பகுதிக்குள் இடிந்து விழுந்தது.

 

தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், சமி முல்லா என்பவரின் வீடு சேதமடைந்தது. அந்த சமயத்தில் வீட்டுக்குள் இருந்த ஷர்மிளா, சமி முல்லா, உபயதுல்லா ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வராதவாறு அங்கேயே சிக்கிக் கொண்டனர். அதிர்ஷ்டவசமாக இடிந்து விழுந்த தடுப்புச் சுவர் வீட்டின் முன் பகுதியில் விழுந்ததால் வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.

 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கும் வருவாய்த் துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டின் முன்புறம் இருந்த கற்களை அகற்றிவிட்டு வீட்டில் இருந்தவர்களைப் பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.

 

மேலும், இடிந்து விழுந்த தடுப்புச் சுவர் அருகே உள்ள மற்ற குடியிருப்புகளிலும் சரியும் அபாயம் உள்ளதால் பாதுகாப்புக் கருதி வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்துச் சம்பவம் குறித்து சேதமடைந்த வீட்டு உரிமையாளர் பேசும்போது, இடிந்து விழுந்த தடுப்புச் சுவரால் எங்க வீட்டு முன்பகுதி முழுவதும் கற்களால் மூடப்பட்டிருக்கிறது. அவசரத் தேவைக்கு வெளியே செல்ல வேண்டும் என்றாலும் அது எங்களுக்குக் கடினமாக இருக்கிறது. சேதமடைந்த வீட்டை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என்று வீட்டு உரிமையாளர் கோரிக்கை விடுத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காட்டுத்தீ பரவல்; திணறும் வனத்துறை

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
spread of wildfires; A forest department that is stifling

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருவது வனத்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் சவாலாகி வருகிறது. குன்னூரில் பாரஸ்ட் ஸ்டேல் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பற்றிய காட்டுத்தீயானது நாளுக்கு நாள் வேக வேகமாக பரவி வருவது அந்த பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்துள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த முடியாததால் குன்னூரில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் மரங்கள், செடி, கொடிகள் ஆகியவை தீயில் கருகி உள்ளன. வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் என மொத்தமாக 150 க்கும் மேற்பட்டோர் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் தேனி மாவட்டம் போடி வனப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிச்சாங்கரை, ஊத்தாம் பாறை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னூர், பெரியூர் மலை கிராமத்தில் வனப்பகுதியில் தீப்பற்றக் காரணமாக இருந்த இருவர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சின்னூர், பெரியூர் மலை கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவரும் ஆண்டவர் என்பவரும் விவசாய கழிவுகளை கொட்டி தீ வைத்தபொழுது தீ வனப்பகுதிக்கு பரவியது விசாரணையில் தெரிவந்துள்ளது. கோடைக்காலம் என்பதால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது இயல்பான ஒன்று என கருதப்பட்டாலும் சிலரின் அத்துமீறலால் காட்டுத்தீ உருவாகும் சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.