Skip to main content

என்.எல்.சி.யில் அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு வேலை கோரி குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்! 

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

Waiting struggle with family to get a job for apprentice graduates at NLC!


கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.டி.ஐ அப்பரண்டிஸ் பயிற்சி முடித்து, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்; அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் முன்னிலையில் ஏற்றுக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்; ஐ.டி.ஐ அப்ரண்டிஸ் பயிற்சி முடித்த நபர்களுக்கு உண்டான காலி பணியிடத்தை, அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா திடலில் குடும்பத்தோடு 500க்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் அப்ரன்டிஸ் பயிற்சி முடித்தவர்களைத் தவிர்த்துவிட்டு இயந்திரங்களை இயக்குவதால் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் விபத்துகள் அதிகளவு நடைபெறுகின்றது என்றும், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பயிற்சி முடித்த அப்பரண்டிஸ்கள் மாற்றம் செய்யப்பட்டதால் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை என்றும், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் வேலை இழப்பால் குடும்பத்தை நடத்த முடியாமல் வறுமையில் வாடுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

 

 மேலும் தங்களுடன் சமகாலத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு  மற்ற பொதுத்துறை நிறுவனத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பே நிரந்தர வேலை வழங்கப்பட்டவிட்டது என்றும், இதுபோல் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு துறைகளிலும் பயிற்சி முடித்தவர்கள் வேலைக்கு சேர்ந்து விட்டனர். 
 


என்.எல்.சி. இந்திய நிறுவனம் கடந்த 24 ஆண்டுகளாக  பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்காததால்  தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி  இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.

 

 இந்நிலையில், ஜனவரி 6ஆம் தேதி முதல் கவன ஈர்ப்பு போராட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு விதங்களாக போராடி வரும் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களிடம், என்.எல்.சி. நிர்வாகத்தின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், குடும்பத்துடன் சுட்டெரிக்கும் வெயிலில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அப்பாவிற்கு வேலை வழங்க வேண்டும், கணவனுக்கு வேலை வழங்க வேண்டும், மகனுக்கு வேலை வழங்க வேண்டும் என பல்வேறு பதாகைகளை கையில் பிடித்துக் கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் நெய்வேலி நகரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 2000 கோடிக்கு என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை விற்க மத்திய அரசு ஆலோசனை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Central government advises to sell shares of NLC company for Rs.2000 crore

இந்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தினுடைய 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு இதேபோல் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அன்றைய ஆளும் கட்சியான அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தின. பிறகு தனியாருக்கு விற்கப்படுவதாக இருந்த 5 சதவீத என்.எல்.சி பங்குகளையும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வாங்குவதாக முடிவெடுத்தது. 

இந்த நிலையில், தற்போது மீண்டும் என்.எல்.சியின் 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 2013ல் என்.எல்.சியின் ஒரு பங்கின் விலை ரூ.75 ஆக இருந்தது. தற்போது ஒரு பங்கின் விலை ரூ. 200க்கும் மேல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி, 7 சதவீதம் பங்குகள் என்பது ரூ. 2000 கோடிக்கும் மேலாக வரும் எனச் சொல்லப்படுகிறது. 

தமிழ்நாடு அரசின் நிதி நிலை சூழ்நிலையில், 2000 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்க இயலுமா என்ற கேள்வி எழுவதாகச் சொல்லப்படுகிறது. என்.எல்.சி. இந்தியா லிமிடெட் அரசு நிறுவனத்திற்காகத் தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு உரிய நிவாரணமும், பணியும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனைக் கண்டித்து பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் போராடும் நிலையில், மத்திய பாஜக அரசு தற்போது என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பிரச்சனையைத் தீவிரப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Next Story

'சிறிய அணு உலைகள்'; என்.எல்.சியின் திட்டத்தால் அதிர்ச்சி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'small nuclear reactors'; Shocked by NLC's plan

என்எல்சியில் சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க திட்டம்தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான தகவலை என்.எல்.சி தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய அணுசக்தி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறிய வகை அணு உலைகள் மூலம் 300 மெகாவாட்டுக்கும் குறைவான மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாகவும், 2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வு இலக்கை  எட்ட சிறிய அளவிலான அணு உலைகள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் என்எல்சி-ன் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

nn

நெய்வேலி கடலூர் பகுதியில் என்எல்சிக்கு நிலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது  பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக தான். ஆனால் அந்த பகுதியில் 300 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறு அணு உலைகளை அமைப்போம் என்று சொல்வது மக்களுக்கு விரோதமானது. அணு உலையில் இருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாளக்கூடிய தொழில்நுட்பம் எந்த நாட்டிலும் கிடையாது. அப்படி சிறிய அணு உலைகள் அமைக்கப்பட்டால் அதன் கழிவுகளை என்ன செய்யப் போகிறார்கள். அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் எப்படி தடுக்கப்படும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. தமிழக அரசு மக்களின் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தது எதற்காகவோ அந்த பயன்பாட்டிற்கு மட்டும் அதனை பயன்படுத்த வேண்டும். நினைத்தபடி எல்லாம் மாற்றிக் கொள்ளும் எந்த உரிமையும் என்எல்சி நிர்வாகத்திற்கு கிடையாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க இருப்பதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.