Skip to main content

"ஐயா, என் வீட்ட காணும்!" - போலீஸ் ஸ்டேஷனை அதிரவைத்த கூலித் தொழிலாளி!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

Wage worker who complained to the police to find the house ...!

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுகா இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிட்டு என்பவரது மகன் தண்டபாணி(45). இவருக்குச் சொந்தமான குடிசை வீடு இருவேல்பட்டு ஊரில் இருந்துள்ளது. இவர் பிழைப்புக்காக சென்னையில் தங்கியிருந்து கூலி வேலைசெய்து பிழைத்து வந்துள்ளார். கரோனா நோய்ப் பரவல் காரணமாக சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் சொந்த ஊரில் வந்து தனது குடிசையில் தங்கி அப்பகுதியில் கூலி வேலை செய்து பிழைத்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து இவரை தேடிவந்த அதிகாரிகள் “உங்களது குடிசை வீட்டை பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உங்களுக்கு கான்கிரீட் வீடு கட்டுவதற்கு ஒதுக்கியுள்ளோம், தாங்கள் கூரை வீட்டை இடித்துவிட்டு கான்கிரீட் வீட்டைக் கட்டிக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளனர். அதிகாரிகளின் பேச்சை நம்பி வட்டிக்கு கடன் வாங்கி, இருந்த கூரை வீட்டையும் விட்டு விட்டு கான்கிரீட் வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தார் தண்டபாணி.

 

மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வீடுகட்டும் திட்டத்தில் தரவேண்டிய பணத்தையும் அதற்கான அனுமதியையும் கேட்டு நடையாய் நடந்தார். திருவெண்ணைநல்லூர் ஒன்றிய அலுவலகத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு தண்டபாணி சென்றார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் தண்டபாணியிடம், ஏற்கனவே உங்கள் வீடு கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அதற்கான அரசு உதவிப் பணமும் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளனர்.

 

Wage worker who complained to the police to find the house ...!

 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தண்டபாணி “எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் வரவில்லை எனது வங்கிக் கணக்கிற்கும் பணம் அனுப்பவில்லை, அதற்காக நான் எந்த டாகுமென்ட்களிலும் கையெழுத்துப் போடவில்லை. அப்படியிருக்கும்போது எனது வீடு கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகிறீர்களே, இது என்ன விந்தை" என்று விளக்கம் கேட்டுள்ளார். இதைக்கேட்டு தடுமாறிய அந்த அலுவலக அதிகாரிகள் இல்லை இல்லை, உங்கள் வீடு கட்டுவதற்கான உத்தரவை ஒரு வாரம் பின்னர் வந்து வாங்கிச் செல்லுங்கள் வீடு கட்டும் பணியைத் தொடங்குங்கள், வீடு கட்டுவதற்காக அரசு ஒதுக்கீடு செய்த பணத்தை அடுத்தடுத்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்புகிறோம் என்று சமாதானம் கூறி அனுப்பியுள்ளனர்.

 

இதை நம்பி பல்வேறு இடங்களில் கடன் வாங்கி வீட்டுப் பணியைத் தொடர்ந்து செய்து வந்த தண்டபாணி மீண்டும் அதிகாரிகளைத் தேடி திருவெண்ணைநல்லூர் அலுவலகம் சென்றார். வீடு கட்டுவதற்கான பணி உத்தரவையும், வீடு கட்டும் பணிக்கான பணத்தையும் கேட்டுள்ளார். இப்படி ஒரு முறை அல்ல, பல முறை அலுவலகத்துக்கு நடையாய் நடந்தும், அதிகாரிகள் தண்டபாணிக்கு வீடு கட்டும் பணி உத்தரவும் வழங்கவில்லை, அதற்கான நிதியும் வழங்கவில்லை. இதனால் நொந்துபோன தண்டபாணி அதிகாரிகளின் பேச்சை நம்பி, இருந்த குடிசை வீட்டையும் இடித்துவிட்டு வட்டிக்குக் கடன் வாங்கி தொடர்ந்த வீடுகட்டும் பணியும் அரைகுறையாக நிற்கிறது.

 

வட்டி கட்ட முடியவில்லை. அதிகாரிகளோ என் வீடு ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டது என்று கூறுகின்றனர். எனவே, எனது வீட்டைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கூறி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் தண்டபாணி புகார் அளித்துள்ளார். போலீஸார் அவரது புகாரை ஏற்று தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டாத வீட்டை கட்டி முடிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், என் பெயருக்கு எந்த உத்தரவும் வழங்கவில்லை. பணமும் அனுப்பவில்லை. அப்படியானால், என் பெயரில் யாருக்கு வீடு கட்டிக் கொடுத்தார்கள். அதற்கான பணத்தை யாரிடமும் கொடுத்தார்களா அல்லது வீட்டைக் கட்டாமலேயே கட்டியதாகக் கணக்குக் காட்டி பணத்தைச் சுருட்டிக் கொண்டார்களா என்ற கேள்வியை எழுப்புகிறார் தண்டபாணி. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

முற்றுகைக்கு ரெடியான நிர்வாகி கைது; தொடரும் கீழ்பவானி வாய்க்கால் நீர் திறப்பு பேச்சுவார்த்தை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Executive arrested for siege; Negotiations on the opening of water by the Kilpawani canal continue

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தில் 5-வது நினைப்புக்கு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் இந்த 5வது நினைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியிடாததால் நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கீழ்பவானி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவியை சென்னிமலை போலீசார் அவர் வீட்டில் இருந்து கைது செய்து சென்னிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இதையடுத்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சுதந்திர ராசு, வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சென்னிமலையில் குவிந்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5வது இணைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து வரும் 20 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி விடுவிக்கப்பட்டார்.