Skip to main content

மனிதன் பேசிய முதல்மொழி தமிழ் -வைகோ பேச்சு

Published on 13/08/2019 | Edited on 13/08/2019


 
 தமிழியக்கம் சார்பில் " சூட்டி மகிழ்வோம் தூய தமிழ் பெயர்கள் " என்ற 46 ஆயிரம்  பெயர்கள் கொண்ட புத்தக வெளியீட்டு விழா, திருவண்ணாமலையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. 

 

விழாவுக்கு தமிழியக்க தலைவரும் வி ஐ டி வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது; தற்போது 46 ஆயிரம் தூய தமிழ் பெயர்கள் கொண்ட புத்தகம் வெளியிடபட்டது. இந்த புத்தகத்தில் 23 ஆயிரம் ஆண் பிள்ளைகள் பெயரும் 23 ஆயிரம் பெண் பிள்ளைகள் பெயரும் உள்ளது. கல்லணை கட்டிய கரிகாலன் தன்னுடைய 3 பிள்ளைகளுக்கு தமிழில் தான் பெயர் சூட்டினார்.

 

v


 
உலகத்தில் சுமார் 6900 மொழிகள் பேசப்படுகிறது. இதில் மிகவும் தொன்மையான மொழிகள் 7 உள்ளது. இவற்றில் மிகவும் பழமையான மூத்த மொழி தமிழ். தமிழியக்கம் தொடங்கும் போது நமது நோக்கம் என்பது தமிழ் நாட்டிலே தமிழை பாதுகாப்பதும், அயல்நாட்டிலே தமிழை வளர்ப்பதும் தான். உலகத்தில் முதல் இலக்கண நூல் தமிழ் தான்.


3500 ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு தொல்காப்பியம் வந்துள்ளது. 1500 ஆண்டுகளுக்கு முன்பு சாதியே கிடையாது. அதன் பின்னர் தான் சாதி, இனம், மதம் போன்றவை வந்தது. 


 
1916 ஆம் ஆண்டு மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கம் தொடங்கினார்கள். இதற்கு காரணம் தனித்தமிழில் எழுத வேண்டும் என்பதற்காக தான். நாம் அன்னிய மொழிகளுக்கு எதிரிகள் அல்ல. எல்லா மொழிகளையும் நேசிப்போம் தமிழை சுவாசிப்போம். மத்திய அரசு 1968 ஆம் ஆண்டு மும்மொழி திட்டம் நிறைவேறியது. இந்த மும்மொழி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழி 90 நாடுகளில் பேசப்படுகிறது. மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு உதவி செய்வது போல் தமிழ் மொழிக்கும் உதவ வேண்டும் என பேசினார்.


 
விழாவில் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:   ’’தமிழ் மொழியை பேசுபவர்கள், எழுதுபவர்கள் தமிழ் மொழியை தொடர்ந்து பேணி காக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியில் பெயரிட வேண்டும் என்பதற்கு மட்டுமின்றி அதனை முறையாக கொண்டு வருவதற்காக இந்த புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது. மண மக்களுக்கு இந்த புத்தகத்தை கொடுக்க வேண்டும்.

 

எந்த மொழியையும் திணிக்கக் கூடாது, விரும்பி படித்தால் படிக்கலாம். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல .   ஆனால் வேறு மொழியை நம் மீது திணித்தால் அதை எதிர்த்து போராடுவோம். மத்திய அரசு புதிய கல்வி கொள்கையால் மாநில மொழிகளை படிப்படியாக அழிக்க பார்க்கின்றனர். ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகள் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் வேலை வாய்ப்பு இழக்க நேரிடும். யாரும் நம் மொழியை கட்டுப்படுத்த முடியாது. யாராலும் எந்த சக்தியாலும் தமிழ் மொழியை அழித்து விட முடியாது என்பதை உறுதியாக கூறுகிறேன்’’ என்று கூறினார்.


 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: ‘’மனிதன் பேசிய முதல் மொழி தமிழ் மொழி.  மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி. திருக்குறளில் சமயம், நதி, கடல், தமிழ் போன்ற எந்த வார்த்தையும் கிடையாது. அதனால் தான் அது உலக பொதுமறையானது. இந்தித் திணிப்பு போராட்டத்தின் போது 8 பேர் தீக்குளித்து வீழ்ந்தார்கள் . எண்ணற்றவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்கள். 


 
என் மீது வழக்கு போடுவதை பற்றி நான் கவலைப்படுவதில்லை. இதை நான் நாடாளுமன்றத்திலே சொல்வேன். நான் மணமக்களுக்கு திருக்குறள் புத்தகம் கொடுக்கும் வழக்கம் கொண்டவன். மேலும் மணமக்களிடம் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என கூறுவேன். மணமக்களுக்கு இந்த தூய தமிழ்பெயர்கள் கொண்ட புத்தகத்தை கொடுங்கள்.   விசுவநாதன் தமிழுக்கும், தமிழ் இனத்திற்காகவும் பாடுபட வேண்டும். இதில் உங்களை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்’’  என்றார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.