Skip to main content

இந்திய பொருளாதார சங்கத்தின் தேசிய மாநாடு- வேலூருக்கு கவர்னர் புரோகித் வருகிறாரா?

Published on 27/12/2018 | Edited on 27/12/2018
b

 

இந்திய பொருளாதார சங்கத்தின்( Indian Economic Association) 101வது வருடாந்திர தேசிய மாநாடு வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகம் வளாகத்தில் டிசம்பர் 27ந்தேதி தொடங்கி 3 நாள் நடைபெறுகிறது. இன்று 27ந்தேதி காலை இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்க உள்ளதாக இச்சங்கத்தின் தேசிய தலைவரும் விஐடி வேந்தருமான டாக்டர் ஜி.விசுவநாதன் தெரிவித்துள்ளார். 

 

இதுப்பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  சென்னை பல்கலைக்கழகத்தின் முதல்  இந்திய பொருளாதார பேராசிரியர் முனைவர் கில்பர்ட் ஸலேட்டர், மும்பை மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெர்சி ஆன்ஸ்டே, கல்கத்தா மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சி.ஜெ.ஹாமில்டன் மற்றும் சென்னை பொருளாதார சங்கத்தின் துணையுடன் 1917ம் ஆண்டில் இந்திய பொருளாதார சங்கத்தினை தொடங்கினார்.

 


100 ஆண்டுகளை கடந்து விட்ட இச்சங்கத்தின் தேசிய தலைவர்களாக பொருளாதார நிபுணர்களான இந்தியாவின் முன்னாள் பிரதமர் முனைவர் மன்மோகன்சிங் , நோபல் பரிசு பெற்ற முனைவர் அமர்த்தியா சென், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்கள்  முனைவர் ஐ.ஜி.பட்டேல், முனைவர் சி.ரங்கராஜன், முனைவர் ஓய்.வி.ரெட்டி, உலக வங்கியின் மேனாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு ஆகியோர் உட்பட பலர் பொறுப்பு வகித்துள்ளனர்.

 


கடந்த 2017 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டுரில் உள்ள ஆச்சார்யா நாகர்ஜீனா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 27ந்தேதி முதல் 29ந்தேதி வரை   இச்சங்கத்தின்  முதல் நூற்றாண்டு விழா மாநாடு நடைபெற்றது. ஆந்திர மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைதிக்கான நோபல் விருது பெற்ற முகம்மது யூனூஸ், கிராமின் வங்கி நிறுவனர் முனைவர் ரங்கராஜன் ஆகியோர் முன்னிலையில் நாட்டின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மாநாட்டினை தொடங்கி வைத்தார். அந்த மாநாட்டில் இந்திய பொருளாதார சங்கத்தின் தேசிய தலைவராக விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார்.

 


இச்சங்கத்தின் 101வது ஆண்டு மாநாடு வரும் 27ந்தேதி தொடங்கி 29 வரை 3 நாட்கள் விஐடி பல்கலைக்ழகத்தில் நடைபெறுகிறது. விஐடி சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளியின்   ( VIT School of Social Sciences and Language)  வணிகவியல் துறை (Dept of Commerce) இந்த மாநாட்டை  ஏற்பாடு செய்துள்ளது. 27ந்தேதி அன்று காலை 11.30 மணியளவில் இம்மாநாட்டை சங்கத்தின் தேசிய தலைவரும் விஐடி வேந்தருமான டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமையில் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். இந்தியா முழுவதிலுமிருந்து இந்த மாநாட்டில் பொருளாதார நிபுணர்கள் பேராசிரியர்கள் பெருமளவில் வந்து பங்கேற்கின்றனர்.


இதற்காக தமிழக – ஆந்திரா எல்லையிலும், பல்கலைக்கழகத்தை சுற்றிலும் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’’என்று தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்க வருகை தருகிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்கிறது மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியரசுத் தலைவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

GOVERNOR BANWARILAL PUROHIT MEET PRESIDENT AT DELHI


தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமான சண்டிகரின் நிர்வாகப் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தலைநகர் டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

 

அதன் தொடர்ச்சியாக, இன்று (08/09/2021) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு, சண்டிகர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. 

 

 

Next Story

சுதந்திர தின விழா- தமிழ்நாடு ஆளுநர் தேநீர் விருந்து!

Published on 15/08/2021 | Edited on 15/08/2021

75 வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று (15/08/2021) மாலை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்தார். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் சட்டமன்றக் குழு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், "மாநில அரசின் நடவடிக்கைகளால் பல துறைகளில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது. கடின உழைப்பும், வெளிப்படைத்தன்மைக் கொண்ட ஆட்சியை மக்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முதலமைச்சருக்கு பாராட்டுகள்" எனத் தெரிவித்தார். 

 

இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்குறள் பன்னாட்டு பதிப்பு புத்தகங்களை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.