Skip to main content

“உழைக்காமல் கஷ்டப்படாமல் பணம் கொட்டும்!” -முகநூல் தோழிகளிடம் நகை பூஜை மோசடி!

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

 

‘கேட்பவன் கேனையாக இருந்தால் கேப்பையில் நெய் வடியுமாம்..’
-இந்த கிராமத்துச் சொலவடை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பொருந்திப் போகுமோ? அப்படி ஒரு சம்பவம்தான் விருதுநகர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது. 

 

m

 

சாத்தூரைச் சேர்ந்த ராஜ்குமாரும் நவீன்குமாரும் கில்லாடி இளைஞர்கள். தங்களின் மோசடியான செயலுக்கு முகநூலைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். முகநூல் நட்பு என்ற பெயரில் பெண்களுக்கு வலை விரிப்பதும், அவர்களை ஏமாற்றுவதும் நம் நாட்டில் வாடிக்கையாகிவிட்டது. ராஜ்குமாரும் நவீன்குமாரும் அந்த ரக ஆண்கள் அல்ல. வசதி படைத்த பெண்களிடம் பெண் குரலில் பேசி தோழிகள் ஆகிவிடுவர். “நாங்க சீரியல் நடிகைகளாக்கும்..” என்று பெண்களின் பலவீனம் அறிந்து பேசுவார்கள்.

 

n

 

இவர்களின் சுவாரஸ்யமான பேச்சில் முகநூல் தோழிகள் லயித்து, நம்பிக்கை வைத்தவுடன் “ஒரு கோவில் இருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த கோவில். உங்கள் வீட்டு நகைகளை அக்கோவிலில் வைத்து பூஜை செய்தால், செல்வம் பெருகி தொடர்ந்து நல்லதே நடக்கும்.” என்று தூண்டில் போட்டிருக்கின்றனர். கடுமையாக உழைத்திடாமல், எந்தக் கஷ்டமும் படாமல்,  பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு எளிதான வழி இருக்கிறதென்று இவ்விருவரும் உருகி உருகிச் சொன்னதை, அப்படியே நம்பிவிட்டனர் அந்த முகநூல் தோழிகள். பிறகென்ன? தோழிகளின் நகைகளெல்லாம் பறிபோயின. 

 

r

 

இரண்டு மாதங்களுக்கு முன் சாத்தூர் டவுண் காவல் நிலையத்தில் சிவகாசியைச் சேர்ந்த ராதிகாவும் செண்பக பவானியும் மோசடியால் தாங்கள் நகைகளை இழந்தது குறித்து புகார் செய்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு, கைபேசி எண் மூலம் ‘ட்ரேஸ்’ செய்தபோது, ராஜ்குமாரும் நவீன்குமாரும்தான் அந்த மோசடிப் பேர்வழிகள் என்பது தெரிந்துபோனது.

 

தனிப்படையினர் இவ்விருவரையும் கொத்தாக அள்ளிக்கொண்டு வந்து விசாரித்தனர். அவர்களிடமிருந்து 61 பவுன் நகைகளையும், ரூ.3 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.    இதே ரீதியில், இவ்விருவரும் பல பெண்களிடம் பேசியே பணத்தைக் கறந்திருக்கின்றனர். யார் யாரை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது குறித்த விசாரணை  தொடர்ந்து நடக்கிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

மடியேந்தி வாக்கு கேட்ட ராதிகா; பிரச்சாரத்தில் ருசிகரம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Radhika asked for vote and Delicious in the campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தனது கட்சியை பா.ஜ.கவில் இணைத்திருந்தார். இதையடுத்து, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவதற்காக நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த வகையில், ராதிகா விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் கப்பலூர் பகுதியில், அ.ம.மு.க, பா.ம.க, த.மா.க கட்சி நிர்வாகிகளுடன் ராதிகாவும், சரத்குமாரும் திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய ராதிகா, “என்னை நீங்கள் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு சிறப்பான கூட்டணி. இந்த கூட்டணி எது சொன்னாலும் செய்யும் கூட்டணி. ஆனால், எதிர் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கூட தெரியவில்லை. உங்கள் சகோதரியாக, அக்காவாக, சித்தியாக இருந்து மக்கள் கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் போராடுவேன். எனவே, எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் விருதுநகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்” என்று கூறி அங்கிருந்து புறப்பட தயாரானார்.

அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் கிழக்கு சீமையிலே படத்தில் விருமாயி கதாபாத்திரம் போல் நடித்து காட்டுமாறு கோரிக்கை வைத்தனர். இதனைக் கேட்ட ராதிகா, “அதை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா?” எனக்கூறிய அவர், கிழக்கு சீமையிலே படத்தில் பேசிய வசனத்தை சொல்லி சினிமாவில் வருவது போல் மடியேந்தி மக்களிடம் வாக்கு கேட்டார். அதனை அங்கிருந்த மக்கள், ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.