Skip to main content

விருத்தகிரீஸ்வரர் கோவில் மெய்க்காவலரைக் கொலை செய்த வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

virudhachalam temples security incident  court judgement

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் ராமன் 2- ஆவது தெருவைச் சேர்ந்தவர் பாலு (வயது 45). இவர் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மெய்க்காவலராகப் பணிபுரிந்து வந்தார். அதே கோவிலில் ராமச்சந்திரன் பேட்டையைச் சேர்ந்த சங்கர் (வயது 58) என்பவர் இரவு காவலராகப் பணிபுரிந்து வந்தார். சங்கர் இரவு நேரப் பணிக்கு வந்த பிறகுதான் பாலு தன்னுடைய மெய்க்காவலர் பணியை முடித்து கோவிலை பூட்டி விட்டுச் செல்ல வேண்டும். ஆனால் இரவு நேரங்களில் வெகுநேரமாகியும் சங்கர் உரிய நேரத்திற்கு வரவில்லை. இதனால் சங்கருக்கும் பாலுவிற்கும் முன்விரோதம் இருந்து வந்தது. 

 

virudhachalam temples security incident  court judgement

 

இந்நிலையில் கடந்த 06/05/2017 அன்று சங்கர் இரவு பணிக்கு வந்தார். அப்போது சங்கருக்கும், பாலுவிற்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பாலு தன்னுடைய கையில் வைத்திருந்த சாவியால் சங்கரை தாக்கியுள்ளார். இதனால் சங்கர் தன்னுடைய மகன் சபரி என்ற சண்முகசுந்தரத்திற்கு (வயது 33) போன் செய்து சம்பவத்தைக் கூறியுள்ளார். இதனால் சண்முகசுந்தரம் தன்னுடைய நண்பர் முத்து (வயது 30) என்பவருடன் கோவிலுக்கு வந்தார்.

 

virudhachalam temples security incident  court judgement

 

அப்போது ஏற்பட்ட தகராறில் சண்முகசுந்தரமும், முத்துவும் சேர்ந்து பாலுவின் கையில் இருந்த சாவியைப் பிடுங்கி அவரை தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பாலு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

 

virudhachalam temples security incident  court judgement

 

இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விருதாச்சலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணையில் சங்கர், சபரி (எ) சண்முகசுந்தரம், முத்து ஆகிய மூவரும் சேர்ந்து பாலுவைக் கொலை செய்தது உறுதியானது. அதையடுத்து நீதிபதி இளவரசன் மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 

 

இவ்வழக்கில் மாவட்ட அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜராகி வாதாடினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.