Skip to main content

பத்து ஆண்டுகள் கழித்து நடந்த பழிக்குப்பழி கொலை! அதிர்ச்சியில் காவல்துறை! 

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

viluppuram district police

 

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் நிலைய எல்லையில் உள்ள கோட்டக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (55). அரசுப் பள்ளி சத்துணவு பொறுப்பாளராகவும், திமுக இளைஞரணி உறுப்பினராகவும் இருந்தவர். இவரது மனைவி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். இவர் கடந்த 11ம் தேதி காலை திருச்சிற்றம்பலம் கூட்-ரோட்டில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, திண்டிவனம் டி.எஸ்.பி அபிஷேக் குப்தா (பொறுப்பு), ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. மேலும், ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி மனோஜ் சங்கர் (20), சரஸ்வதி (28), இவரது சகோதரி சாந்தி(40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  

 

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலையான ஜெயக்குமார் ஊரைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி சங்கர்(40), கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, ஒரு கும்பல் சங்கரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. சங்கர் கொலை சம்பந்தமாக ஆராவில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆலங்குப்பம் அருகில் உள்ள ராயப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஒரு நாள் இருசக்கர வாகனத்தில் வரும்போது அந்த வாகனமும், கொலை செய்யப்பட்ட சங்கர் உறவினரின் இருசக்கர வாகனமும் குயிலா பாளையம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

 

இதில் மணிகண்டன் தனது வாகனத்திற்கு இழப்பீடு கேட்டுள்ளார். அதற்கு சங்கர், மணிகண்டனை கோட்டை கரைக்கு அழைத்து சென்று பஞ்சாயத்து பேசியுள்ளனர். அப்போது அங்கு தகராறு ஏற்பட்டு, மணிகண்டனை தாக்கியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த மணிகண்டன் ஏழு பேர் கும்பலுடன் சேர்ந்து சங்கரை கோவில் திருவிழாவின் போது கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மணிகண்டன், தமிழ்வேந்தன் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

இதில், தமிழ் வேந்தன் ஜெயக்குமாரின் தம்பி ஜெய்சங்கரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தம்பி மகனை ஜாமீனில் வெளியே கொண்டு வர ஜெயக்குமார் உதவி செய்துள்ளார். ஜாமினில் வெளியே வந்த தமிழ் வேந்தன், இறந்த சங்கரின் மனைவி சரஸ்வதியிடம் ‘உனது கணவர் சங்கரை கொலை செய்து விட்டோம். உங்களால் என்ன செய்ய முடிந்தது’ என்று சவால் விட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த சரஸ்வதி, தனது தங்கை கணவரான குமரவேலிடம் இது குறித்து கூறி அழுதுள்ளார். இதனால் தமிழ் வேந்தன் மீது சங்கர் குடும்பத்தினர்,  மேலும் ஆத்திரம் கொண்டிருந்தனர்.

 

இதற்கெல்லாம் காரணம் ஜெயக்குமார் தான் எனவே அவரை கொலை செய்ய குமரவேல் தரப்பு முடிவு செய்தது.  ஜெயக்குமாரை கொலை செய்ய முடிவு செய்த குமரவேல், சந்துரு என்பவரை கூட்டு சேர்த்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சந்துரு ஒரு பெண்ணை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் பெண்வீட்டார் மறுப்பு தெரிவித்து அப்போது, ஜெயக்குமார் தலையிட்டு பிரச்சனையை முடித்துவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், சந்துரு ஜெயக்குமார் கொலையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 

 

ஜெயக்குமார் கொலை சம்பந்தமாக மனோஜ் சங்கர் (20), சரஸ்வதி (28), இவரது சகோதரி சாந்தி(40) ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், குமரவேல் - சந்துரு ஆகிய இருவரும் நேற்று காலை கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆரோவில் போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ஏழுமலை, சரஸ்வதி உறவினர், கருவடிக்குப்பம் குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ராஜேஸ் தாஷுக்கு சிறைத்தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Former DGP Rajesh Das gets 3 jail sentence

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி, அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கத் தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை” எனக் குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான் விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல் முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12 ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா தெரிவித்திருந்தார். 

அதன்படி இன்று, ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.