Skip to main content

கரோனாவால் வருமானமில்ல... திருட்டுக்கு திரும்பிய திருடன்..!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

viluppuram Bike thief arrested and police recovered bikes


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருட்டுபோனது. அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். திருடுபோன வாகன உரிமையாளர்களின் புகார்கள் காவல் நிலையங்களில் குவியத் தொடங்கியது. 


இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உத்தரவின்பேரில் திண்டிவனம் டி.எஸ்.பி. கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள், தலைமைக் காவலர்கள் ஐயப்பன், வெற்றிவேல், கணேசன், செந்தில், கோபால், பூபால் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அந்தத் தனிப்படையினர், நேற்று முன்தினம் திண்டிவனத்தில் உள்ள செஞ்சி பேருந்து நிறுத்தத்தில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். 


அவர்களை தடுத்துநிறுத்த முயன்றபோது, இருவரும் தப்பியோட முயன்றுள்ளனர். ஆனால், தனிப்படை காவலர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து காவல் நிலையம் கொண்டுசென்று தீவிர விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், செஞ்சியை அடுத்த தையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் ராஜசேகர் என்கிற ராஜேஷ் கண்ணன், அதே பகுதியைச் சேர்ந்த ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் லோகு என்கிற லோகநாதன் ஆகியோர் திண்டிவனத்தில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் புரோக்கராகச் செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்தது. 

 

இருவரிடத்திலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், திண்டிவனத்தில் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் கடந்த 2017 முதல் தற்போதுவரை சுமார் 70க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்றதை இருவரும் ஒப்புக் கொண்டனர். இவர்கள், இருசக்கர வாகனங்களைத் தனித்தனியாகப் பிரித்து 'சேஸ்' நம்பர்களை மாற்றி விற்பனை செய்துவந்ததாகத் தெரியவந்துள்ளது. 


இதையடுத்து 2 பேரையும் கைதுசெய்த போலீசார், 18 இருசக்கர வாகனங்களை தற்போது அவர்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர். டூவீலர் திருட்டில் கைதான ராஜேஷ் கண்ணன், மதுராந்தகம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, உத்திரமேரூர், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் தன் கைவரிசையைக் காட்டி வந்துள்ளார். மேலும், 2016ஆம் ஆண்டு பழைய வழக்குகளை முடித்துவிட்டு சென்னை துரைப்பாக்கத்தில் தங்கியிருந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் மீண்டும் டூவீலர் திருட்டை துவக்கியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.