Skip to main content

அரசு தடை உத்தரவை மீறி தீமிதி திருவிழா நடத்த முயன்றவர்கள் மீது வழக்குப் பதிவு!!!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

Villupuram - Temple - Function issue

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் கூட்டமாக கூடும் நிகழ்ச்சிகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் திருமணம், இறப்பு உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். கோவில் திருவிழாக்கள் அரசியல் கட்சி கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் இவை அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.


இப்படிப்பட்ட நிலையில், விழுப்புரம் அடுத்த வேலியம்பாக்கம் கிராமத்தில் மன்னாதீ ஈஸ்வரர் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் கனகேசன், சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் போலீஸார் அந்த ஊருக்கு சென்றனர்.

அங்கு ஊரடங்கு உத்தரவை மீறி கிராமத்து பெண்கள் பொங்கல் வைத்தும், தீ மிதிப்பதற்கான ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்தும்கொண்டிருந்தனர். அங்கு சென்ற போலீசார் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், திருவிழா நடத்த அனுமதிக்க முடியாது எனக்கூறி விழாவினை தடுத்து நிறுத்தியுள்ளனர்.  அதோடு ஊர் மக்களை கலைந்து போக செய்துள்ளனர். தீமிதிப்பதற்கான மரக்கட்டைகள் எரிந்துகொண்டிருந்தன. 

 

 


அவை மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஊரடங்கு உத்தரவை மீறி தீமிதி திருவிழா நடத்துவதற்க்கு ஏற்பாடு செய்த வேலியம்பாக்கம் கிராம ஊர் நாட்டாமை திருமாவளவன், தர்மகர்த்தா கனகசபை, பூசாரி குமரகொடி மற்றும் ஊர் பொதுமக்கள் ரவி சிவகுரு, பாண்டுரங்கன் சுரேஷ் ஆகியோர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.