Skip to main content

மெய் மறந்த பெண் பக்தர்கள்; கைவரிசை காட்டிய பெண் கும்பல் 

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

villupuram district mailam temple festival incident  

 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கொல்லியம் குணம் கிராமத்தில் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர் என பக்தர்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி குடமுழுக்கு  விழாவிற்கு வருகை தந்த பெண் பக்தர்கள் மத்தியில் ஊடுருவி திருட வந்த பெண்கள் பலர் பெண்களிடம் இருந்து நகைகளை  பறித்துள்ளனர்.

 

இதில் மயிலும் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மனைவி லட்சுமி காந்தம் என்பவரிடமிருந்து ஆறு பவுன் நகையும், இறையானூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலி என்பவரிடமிருந்து மூன்று பவுன் நகையும், கணபதி பட்டு கிராமத்தைச் சேர்ந்த மலர்விழி என்பவரிடமிருந்து மூன்று பவுன் நகை என சுமார் 15 பவுன் தங்க நகைகளை பெண்கள் திருடிச் சென்றுள்ளனர். தாங்கள் அணிந்திருந்த நகைகளை பறிகொடுத்த பெண்கள் கூச்சலிட்டு சத்தம் போட்டு உள்ளனர். இதையடுத்து மயிலம் போலீசார் அந்த கும்பலில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களை தீவிரமாக தேடினர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு நின்றிருந்த ஐந்து பெண்கள் ஒரு ஆட்டோவில் ஏறி தப்பி செல்ல முயன்றுள்ளனர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் சந்தேகம் அடையும் வகையில் பதில் அளித்துள்ளனர்.

 

அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று முறையான விசாரணை நடத்தியதில் குடமுழுக்கு விழாவில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்களிடம் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்களான, தஞ்சாவூர் மாவட்டம் கோரிக்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மனைவி செல்வி, சங்கர் என்பவர் மனைவி ஜெயந்தி, ஆசைத்தம்பி என்பவர் மனைவி கஸ்தூரி, திருச்சி மாவட்டம் கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி உமா, திருவரம்பூர் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மனைவி ராசாமணி என்பதும் இவர்கள் இங்கு மட்டுமல்லாமல்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குடமுழுக்கு விழா மற்றும் திருவிழாக்களில் மெய் மறந்து பக்தியோடு சாமி தரிசனம் செய்யும் பெண் பக்தர்களை நோட்டமிட்டு அவர்கள் தன்னிலை மறந்து  இருக்கும் நேரத்தில் அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்து  கொண்டு அங்கிருந்து தப்பி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரையும்  கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஏழரை பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.