Skip to main content

தொடர் திருட்டில் சிக்கித் தவிக்கும் கிராமம்...

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

Village in serial theft near kallakurichi...


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு அசோக்குமார், செல்வம் என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஆறுமுகமும் அவரது மனைவியும் தங்களுக்குச் சொந்தமான ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர். எதிரில் இவர்களுக்குச் சொந்தமான ஒரு மாடி வீடு உள்ளது. இவர்கள் ஓட்டு வீட்டில் சமையல் செய்வதும், சாப்பிடுவதும் இரவு நேரத்தில் எதிரில் உள்ள தங்கள் மாடி வீட்டில் சென்று படுத்துக்கொள்வதுமாக இருந்துள்ளனர். 


அந்த மெத்தை வீட்டின் உள்ளே உள்ள பீரோவில், 5 பவுன் நகை, ரூ.67 ஆயிரம் பணம் வைத்திருந்தனர். வழக்கம்போல, கணவன் மனைவி இருவரும் ஓட்டு வீட்டில் சாப்பிட்டுவிட்டு மாடி வீட்டுக்குவந்து படுத்துத் தூங்கிவிட்டனர். மர்ம நபர்கள் சிலர், நேற்று முன்தினம், நள்ளிரவு இவர்களுக்குச் சொந்தமான ஓட்டு வீட்டில், புகுந்து கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர். 


அங்கு அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் எதிரில் உள்ள மாடி வீட்டினுள் புகுந்து, பீரோவிலிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 5 பவுன் நகை, ரூ.67 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆறுமுகம் சின்னசேலம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பாலகிருஷ்ணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், தனிப்பிரிவு ஏட்டு பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவ்வூரில் உள்ள கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்துள்ளனர்.

 

இதே ஊரில், சமீப காலமாக தொடர்ந்து திருட்டு நடந்துவருவதாக தெரிவிக்கின்றனர் அவ்வூர் மக்கள். மேலும், இரண்டு கிராம நிர்வாக அலுவலர் வீடுகள், இரண்டு விவசாயிகள் வீடு, மாரியம்மன் கோயில் என ஐந்து இடங்களில் சமீபகாலமாக, தொடர் திருட்டு நடந்து வந்துள்ளது. இப்படி ஒரு கிராமத்தையே குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் கும்பலை காவல்துறை எப்போது பிடிக்கும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.