Skip to main content

'மருத்துவமனையில் இறந்தவர் உடலை ஊருக்குள் கொண்டுவரக் கூடாது...' - இன்றும் மாறாத கிராமத்து வழக்கம்!!

Published on 27/11/2020 | Edited on 28/11/2020

 

 Village custom that still unchanges today

 

தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசமான பழக்கவழக்கங்கள் பழங்காலந் தொட்டு இன்றளவும் மாறாமல் நடைமுறையில் இருக்கும். இந்தப் பழக்கங்கள் இறப்பிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், குளமங்கலம், பனங்குளம், மேற்பனைக்காடு எனச் சுற்றியுள்ள சுமார் 50 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒருவர் இறந்தால், துக்கம் விசாரிக்கச் செல்லும் உறவுக்கார ஆண்கள் மேல்சட்டை இல்லாமல் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு, கைகளைத் தழுவி, உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கெடுப்போம் என்பதை மெய்பித்துச் செல்வார்கள். இறப்பில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக தான் சட்டை கழற்றிச் செல்லும் பழக்கம் இன்றும் உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

அதேபோல, தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள பாங்கராங்கொல்லை கிராமத்தில் யாராவது இறந்தால் அந்த கிராம மக்களில் ஒருவர் மாட்டு வண்டியை கிராமத்திற்குள் ஓட்டிச் செல்ல, அந்த மாட்டு வண்டியில் வரட்டிகளையும், ரூ, 5, 10 பணத்தையும் அந்த வண்டியில் வைத்து அனுப்புகிறார்கள். கிராம மக்கள் கொடுத்த சாண வரட்டியில் இறந்தவர், சடலம் எரிக்கப்படுகிறது. ஈமச்சடங்கு செலவுகளும் கிராம மக்கள் கொடுத்த பணத்திலேயே செய்யப்படுகிறது. இது குறித்து அந்த கிராம இளைஞர்கள் கூறும் போது, சுப நிகழ்ச்சிகள் என்றால் முன்னதாகத் திட்டமிட்டுச் செய்வதால், அதற்கான பணம் திட்டமிட்டுச் செலவிடப்படுகிறது. ஆனால், இறப்பு என்பது எதிர்பாராமல் நடப்பது. அவர்களிடம் ஈமச் செலவுக்குப் பணம் இருப்பது சந்தேகம் தான். அதனால்தான் கிராமமே சேர்ந்து அந்தச் செலவை செய்கிறோம் என்றனர்.

 

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள கிராமங்களில், மருத்துவமனையில் ஒருவர் இறந்தால் அவரது உடலை ஊருக்குள் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், சமூக ஆர்வலரான வீரனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் மணிமாறன் பட்டுக்கோட்டையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால், சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், பிராணவாயுடன் மணிமாறனை சொந்த ஊருக்குக் கொண்டு வந்தனர். ஊருக்கு வந்து சிறிது நேரத்தில் அவது உயிர் பிரிந்தது.

 

 Village custom that still unchanges today

 

இது குறித்து அப்பகுதி பெரியவர்கள் கூறும் போது, ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குப் போய் அங்கு இறந்த பிறகு, பல்வேறு கிருமித் தொற்றுகளுடன், சொந்த ஊருக்குக் கொண்டுவரும் போது, அதன் மூலம் சிறுவர்கள், முதியவர்களுக்குக் கிருமி தொற்றிவிடக் கூடாது என்பதற்காகத் தான் வீட்டுக்குக் கொண்டு வராமல், நேரடியாகச் சுடுகாட்டுக்குக் கொண்டு போகும் பழக்கத்தை, எங்கள் முன்னோர்கள் செய்துள்ளனர். அந்தப் பழக்கம் இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. அதே போலத் திருமணம் ஆகாதவர்கள் இறந்தால், பந்தல் அமைப்பதில்லை. கொட்டும் (பறை) அடிக்கமாட்டோம், வெடி வெடிப்பதில்லை. இந்தப் பழக்கங்கள் இன்றும் தொடர்கிறது என்றனர்.

 

தமிழர்களின் சடங்குகளை மேலோட்டமாகப் பார்த்தால் மூடநம்பிக்கைகளைப் போல தெரியலாம். ஆனால், அர்த்தமுள்ளவை என்பது ஆராய்ந்தால்தான் தெரியும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.