Skip to main content

செல்போன் எண்ணை வெளியிட்டு அதிரடி காட்டிய புதிய எஸ்.பி !

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

தமிழக தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை, புதிய தேர்தல் பார்வையாளரை நியமிக்க வேண்டும் என்று தமிழக எதிர்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட நிலையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரையின் பேரில் கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி யாக பணியாற்றி வந்த ராஜசேகரன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

 

vikraman takes charge as karur superindent of police

 

கரூர் எம்.பி. தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளில் கரூர் கலெக்டர், என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை தேர்தலை நிறுத்த தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் என்று செல்லியிருந்த நிலையில் அன்று கரூர் அதிமுக திமுக கட்சியினர் இடையே பெரிய மோதல் நடைபெற்றது. இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என எஸ்.பி மீது குற்றாசாட்டு இருந்தது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியார் மீது காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது திடீர் என கரூர் எஸ்.பி மாற்றப்பட்டிருக்கிறார். 

இந்த நிலையில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் கணினி பிரிவு எஸ்.பி யாக பணியாற்றிய விக்ரமன், கரூர் மாவட்ட எஸ்.பி யாக நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் விக்ரமன், இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு, கரூர் மாவட்ட போலீஸ்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

கரூர் எஸ்.பியாக பொறுப்பெற்ற விக்ரமன் பத்திரிகையாளர்களிடம் :-

வருகிற 19-ந்தேதி அன்று அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி 159 இடங்களில் 250 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி தேர்தல் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக பணம் எடுத்து செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை, ஆய்வு குழு ஆகியவை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யும் நோக்கில் பணம் எடுத்து செல்லப்படுகிறதா? சட்ட விரோத நடவடிக்கையில் யாரும் ஈடுபடுகின்றனரா? என்பதை கண்காணிக்க அரவக்குறிச்சி தொகுதியினுள் 29 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் தொடர்பாக மக்கள் புகார் அளிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ள 1950 என்கிற இலவச எண் உள்ளது.
 

vikraman takes charge as karur superindent of police

 

பொதுமக்கள் தேர்தல் தொடர்பாக அல்லது வேறு ஏதாவது புகார் தொடர்பாக, போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என விரும்பினால், 93446-13343 என்கிற எண்ணை தொடர்பு கொண்டால் தகவல் பெறப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு, பாதுகாப்பினை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நான் விழுப்புரம், நெல்லை, திருவாரூர் மாவட்ட எஸ்.பி யாக பணியாற்றி இருக்கிறேன்.

2016-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட அனுபவம் உள்ளது. இதேபோல் கியூ-பிரிவு எஸ்.பி யாக பணியாற்றியுள்ளேன். எனது சொந்த ஊர் சென்னை ஆகும். தற்போது கரூர் மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்றுள்ளேன்" என கூறினார்.

இந்நிலையில் விதிமுறைகளுக்கு மாறாக, நீண்ட நாட்களாக கரூரில் பணிபுரிந்த கரூர் எஸ்.பி கும்மராஜா அவர்களை பணியிட மாற்றம் செய்ய பலதரப்பு அமைப்புகளும் கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம், காவல் கண்காணிப்பாளரிடம் மற்றும் உயரதிகாரிகளிடமும் வேண்டுகோள் வைத்தும், அவை ஏற்கப்படாமல் இருந்தது. 

இதனையடுத்து கும்மராஜா தொடர்ந்து கரூரில் பணியில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதற்கான காரணங்களை தெரிவிக்கும்படி கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் காவல்துறைக்கு மனு அனுப்பி இருந்தார். காவல்துறை சார்பில், "3 ஆண்டுகள் முடிய இன்னும் சில மாதங்கள் இருப்பதால் அவர் பணியில் தொடர்கிறார்" என்று பதிலளித்துள்ளனர். ஆனால் கும்பராஜா எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், என்று அவருடைய அத்தனை பதவி உயர்வுகளை இதே கரூர் மாவட்டத்திற்கு உள்ளாகவே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல திமுக சார்பில் டி.எஸ்.பி. கும்பராஜாவை மாற்றம் செய்யக்கோரி புகார் மனு கொடுத்திருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கு ஆதரவாக டி.எஸ்.பி. கும்பராஜா செயல்படுவதால் அவர் மீதும் அடுத்த நடவடிக்கை பாயும் என தேர்தல் பார்வையாளர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.