Skip to main content

செல்போன் எண்ணை வெளியிட்டு அதிரடி காட்டிய புதிய எஸ்.பி !

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

தமிழக தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை, புதிய தேர்தல் பார்வையாளரை நியமிக்க வேண்டும் என்று தமிழக எதிர்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட நிலையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரையின் பேரில் கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி யாக பணியாற்றி வந்த ராஜசேகரன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

 

vikraman takes charge as karur superindent of police

 

கரூர் எம்.பி. தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளில் கரூர் கலெக்டர், என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை தேர்தலை நிறுத்த தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் என்று செல்லியிருந்த நிலையில் அன்று கரூர் அதிமுக திமுக கட்சியினர் இடையே பெரிய மோதல் நடைபெற்றது. இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என எஸ்.பி மீது குற்றாசாட்டு இருந்தது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியார் மீது காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது திடீர் என கரூர் எஸ்.பி மாற்றப்பட்டிருக்கிறார். 

இந்த நிலையில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் கணினி பிரிவு எஸ்.பி யாக பணியாற்றிய விக்ரமன், கரூர் மாவட்ட எஸ்.பி யாக நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் விக்ரமன், இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு, கரூர் மாவட்ட போலீஸ்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

கரூர் எஸ்.பியாக பொறுப்பெற்ற விக்ரமன் பத்திரிகையாளர்களிடம் :-

வருகிற 19-ந்தேதி அன்று அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி 159 இடங்களில் 250 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி தேர்தல் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக பணம் எடுத்து செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை, ஆய்வு குழு ஆகியவை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யும் நோக்கில் பணம் எடுத்து செல்லப்படுகிறதா? சட்ட விரோத நடவடிக்கையில் யாரும் ஈடுபடுகின்றனரா? என்பதை கண்காணிக்க அரவக்குறிச்சி தொகுதியினுள் 29 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் தொடர்பாக மக்கள் புகார் அளிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ள 1950 என்கிற இலவச எண் உள்ளது.
 

vikraman takes charge as karur superindent of police

 

பொதுமக்கள் தேர்தல் தொடர்பாக அல்லது வேறு ஏதாவது புகார் தொடர்பாக, போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என விரும்பினால், 93446-13343 என்கிற எண்ணை தொடர்பு கொண்டால் தகவல் பெறப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு, பாதுகாப்பினை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நான் விழுப்புரம், நெல்லை, திருவாரூர் மாவட்ட எஸ்.பி யாக பணியாற்றி இருக்கிறேன்.

2016-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட அனுபவம் உள்ளது. இதேபோல் கியூ-பிரிவு எஸ்.பி யாக பணியாற்றியுள்ளேன். எனது சொந்த ஊர் சென்னை ஆகும். தற்போது கரூர் மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்றுள்ளேன்" என கூறினார்.

இந்நிலையில் விதிமுறைகளுக்கு மாறாக, நீண்ட நாட்களாக கரூரில் பணிபுரிந்த கரூர் எஸ்.பி கும்மராஜா அவர்களை பணியிட மாற்றம் செய்ய பலதரப்பு அமைப்புகளும் கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம், காவல் கண்காணிப்பாளரிடம் மற்றும் உயரதிகாரிகளிடமும் வேண்டுகோள் வைத்தும், அவை ஏற்கப்படாமல் இருந்தது. 

இதனையடுத்து கும்மராஜா தொடர்ந்து கரூரில் பணியில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதற்கான காரணங்களை தெரிவிக்கும்படி கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் காவல்துறைக்கு மனு அனுப்பி இருந்தார். காவல்துறை சார்பில், "3 ஆண்டுகள் முடிய இன்னும் சில மாதங்கள் இருப்பதால் அவர் பணியில் தொடர்கிறார்" என்று பதிலளித்துள்ளனர். ஆனால் கும்பராஜா எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், என்று அவருடைய அத்தனை பதவி உயர்வுகளை இதே கரூர் மாவட்டத்திற்கு உள்ளாகவே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல திமுக சார்பில் டி.எஸ்.பி. கும்பராஜாவை மாற்றம் செய்யக்கோரி புகார் மனு கொடுத்திருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கு ஆதரவாக டி.எஸ்.பி. கும்பராஜா செயல்படுவதால் அவர் மீதும் அடுத்த நடவடிக்கை பாயும் என தேர்தல் பார்வையாளர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

இரத்தத்தில் கடிதம்! சிக்கலில் ஜோதிமணி

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Karur parliament constituency congress conflict  jothimani

நாடு முழுவதுமுள்ள கட்சிகள், பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மும்முரமாக செய்துவருகின்றன. பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளன. யாருக்கு எந்த தொகுதி, எங்கெல்லாம் வேட்பாளர்களை மாற்ற வேண்டும், எப்படித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கூட வரையறை செய்துவிட்டன.

இந்நிலையில், கரூர் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல், அகில இந்திய காங்கிரஸ் தலைமைவரை பரபரப்பை எகிற வைத்துள்ளது. இந்த பாராளுமன்றத் தொகுதியில், வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை போன்ற சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 1984 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வென்று வந்த இத்தொகுதியில், அதன்பின்னர், தி.மு.க., அ.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் என மாறி மாறி வென்ற நிலையில், மீண்டும் 2019ல் காங்கிரஸ் கட்சி இத்தொகுதியில் வென்றுள்ளது.

கடந்த 2019ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி, 6 லட்சத்து 95 லட்சம் வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தம்பிதுரையை 4 லட்சம் வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், வரவுள்ள தேர்தலில் ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த தேர்தலில் வெற்றிபெறச் செய்த கட்சிக்காரர்களுக்கு எவ்வித மதிப்பும் மரியாதையும் இவர் கொடுப்பதில்லை. இவரால் கட்சியிலிருந்து வெளியேறிய பல நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டனர். அவருடைய செயல்பாடுகள்தான் இப்படி இருக்கிறது என்றால், அவருடைய பேச்சும் சரியாக இல்லை. மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி நடத்திய வீடியோ கான்ஃபரன்ஸ் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதோடு, ராகுல்காந்திக்கு இணையான தலைவராகத் தன்னை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். கூட்டணிக் கட்சிக்கான தர்மத்தை மதிக்காமல் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க.வுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக போராட்டம் நடத்தியது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவருக்கு எதிராக முன்வைக்கின்றனர்.

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோதிமணிக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மாநில தலைவர் அழகிரிக்கு, க.பரமத்தி வட்டார காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் செந்தில்குமார், இரத்தத்தில் எழுதிய கடிதத்தை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் பாங்க் சுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளார்.