Skip to main content

300க்கும் மேற்பட்ட இடங்களில் காங். கூட்டணி வெற்றி பெற்று ராகுல் பிரதமராவார்: விஜயதாரணி பேட்டி

Published on 19/06/2018 | Edited on 19/06/2018
Vijayadharani


300க்கும் மேற்பட்ட இடங்களில் காங். கூட்டணி வெற்றி பெற்று ராகுல் பிரதமராவார் என கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி.

 

 

 

இந்தியா முழுவதும் ராகுல்காந்தியின் 48வது பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி எம்எல்ஏ ராகுல் காந்தியின் பிறந்த நாளை கொண்டாடினார்.
 

அப்போது நம்மிடம் பேசிய அவர், 
 

ராகுல்காந்தியின் பிறந்த நாள் எங்கள் தொகுதியில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அளிக்கும் விழா, உடல்தானம் செய்யும் நிகழ்ச்சி, மாரத்தான் போட்டி என விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

 

 

 

அகில இந்திய அளவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு செல்வாக்கு சரிந்துள்ளது. ராகுல் காந்தியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. சாமானிய மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் ராகுல் காந்தியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. மோடியை மையப்படுத்தி கடந்த பாராளுமன்றத் தேர்தலை பாஜக சந்தித்தது. மோடிக்கு செல்வாக்கு சரியும்போது அக்கட்சிக்கும் செல்வாக்கு சரிந்துவிடும்.

 

 

 

வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். வரும் காலத்தில் சாமானிய மக்களின் பிரதமராக, சாமானிய மக்களின் கஷ்டங்களை அறிந்த பிரதமராக ராகுல் காந்தி உருவெடுப்பார் என்றார்.
 

சார்ந்த செய்திகள்