Skip to main content

அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தைக்கு தலைவர் பதவி...

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

அ.தி.மு.க.வில் குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்ற பிரச்சணை பெரும் பூதமாக கிளம்பி அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களே பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் சத்தமில்லாமல் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை இரா.சின்னத்தம்பி புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அக்கட்சியினர் மத்தியில் பரவத் தொடங்கியதும் பரபரப்பு ஏற்பட்டது.
 

vijayabaskar dad chinnathambi


அவர் வெற்றி பெற்ற விராலிமலை சட்டமன்றத் தொகுதியில், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையைவிட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சுமார் 62 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றார். ஆனால் அதேநேரத்தில் தன் செல்வாக்கை பயன்படுத்தி தன் தந்தையை போட்டியின்றி மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் ஆக்கிவிட்டார் என்கிறார்கள் அதிமுகவினர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் விருப்ப மனுக்கள் வாங்கியபோது, தம்பிதுரைக்கு எதிராக விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் விருப்பமனு கொடுத்தார். அந்த நிலையிலேயே பிப்ரவரி 23 ந் தேதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் பதவிக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

 

vijayabaskar dad chinnathambi


21 இயக்குநர்களுக்கு 32 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தாலும் 11 பேர் வாபஸ் பெற்றதால் 21 இயக்குநர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் நடந்ததால் கூட்டுறவு வங்கி மாவட்டத் தலைவர் தேர்தல் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


இந்தநிலையில்தான் இன்று ஜூன் 10ந் தேதி திங்கட்கிழமை சத்தமில்லாமல் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை இரா.சின்னத்தம்பி மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

அதேபோல துணைத்தலைவர் பதவிக்கு உசிலங்குளம் கே.ஆர்.கணேசன் மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் வேறு யாரும் போட்டிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக பொறுப்பு எற்கிறார். இந்த தகவல் அறிந்த அமைச்சரால் ஒதுக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வினர் 12 ந்தேதி நடக்கவுள்ள அ.தி.மு.க. கட்சி கூட்டத்தில் இதுபற்றி எல்லாம் விவாதம் செய்வோம் என்கின்றனர் அதிமுகவினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.