Skip to main content

விதிகளை மீறும் தேசிய சட்டப்பல்கலைகழக துணைவேந்தர் – நடவடிக்கை எடுப்பாரா சட்டத்துறை அமைச்சர்!

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

இந்தியாவில் 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் திருச்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகம் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தான் போட்டியிட்ட ஶ்ரீரங்கம் தொகுதியில் சிறப்பு அந்தஸ்து கொண்டு வர வேண்டும் என்றும், பல்கலைகழகம் கொண்டு வர வேண்டும் என்றும்  கொண்டுவந்தார்.

சட்டப் படிப்பிற்கென தனிச்சிறப்பாக உருவாக்கப்பட்டவையே இத்தேசிய சட்டப்பல்கலைக்கழகங்கள். இவை தேசிய சட்டப் பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டாலும் அவற்றை நாடாளுமன்றம் உருவாக்குவதில்லை மாறாக அந்தந்த மாநிலங்களின் சட்டமன்றங்களே உருவாக்குகின்றன.

 

Vice-Chancellor of the National Law Enforcement - Minister of Law

 

ஆகவே சட்டப் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே மாநில பல்கலைக்கழகங்களே. பொதுவாக பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில ஆளுநர்களோ அல்லது நாட்டின் குடியரசுத் தலைவர்களோ இருப்பது மரபு. ஆனால் தேசிய சட்டப்பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரையிலே அவ்வாறாக இல்லை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியோ அல்லது அந்தந்த மாநிலங்களின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியோ தான் அங்கே வேந்தராக இருக்க முடியும்.

2012 ஆம் ஆண்டு, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி துணை வேந்தர் பேராசிரியர் கமலா சங்கரன்.

 

Vice-Chancellor of the National Law Enforcement - Minister of Law

 

கடந்த ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஐந்தாம் தேதி தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தால் ஒரு பணிசேர்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. பேராசிரியர், இணை பேராசிரியர், இணை துணை பேராசிரியர், இணை நூலகர், துணை நூலகர் என இருபத்தி மூன்று பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை அப்பல்கலைக்கழகத்தின் இணை பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கமலா சங்கரன் வெளியிட்ட இந்த அறிக்கைக்கு பின்னால் விதி மீறல்கள் அதிகம் இருக்கிறது என்கிற குற்றசாட்டு வெளியாகி உள்ளது. இது குறித்து பேராசிரியர்கள் சிலர் நம்மிடம் பேசும் போது…

தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகச் சட்டம் 2012 இன் படி பதிவாளர் மட்டுமே பணிசேர்ப்பு அறிக்கையை வெளியிட முடியும். ஆனால் இந்த பல்கலைகழக்கத்தில் மூன்று மாத ஒப்பந்தம் அடிப்படையில் தற்காலிக பணியில் உள்ள இணை பதிவாளர் இவ்வறிக்கையை வெளியிடுமாறு செய்ய வைத்திருக்கிறார் துணை வேந்தர் பேராசிரியர் கமலா சங்கரன். பணி சேர்ப்பு அறிக்கையை வெளியிட கல்விக்குழுவின் பரிந்துரை வேண்டும். கல்விக்குழுவின் பரிந்துரை இன்றி நிர்வாக குழு அறிக்கையினை வெளியிட முடியாது. ஆனால் இங்கே நிர்வாக குழு நேரடியாக இதனை பரிந்துரை செய்திருக்கிறது. ஒருவேளை கல்விக்குழுவில் இது பற்றிய விவாதம் நடந்தால் பேராசிரியர்கள் இதனை தடுத்து நிறுத்திவிடுவார்கள் என்று பயந்து கமலா சங்கரன் யாருக்கும் தெரியாமல் நிர்வாக குழுவின் ஒப்புதலைப்பெற்று இவ்வறிக்கையினை வெளியிட்டுள்ளார். பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் படு ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது. பேராசிரியர்களுக்கும் நிர்வாக குழுவிற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது. யாருடனுடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறது.

 

Vice-Chancellor of the National Law Enforcement - Minister of Law

 

தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகச் சட்டம் 2012 முழுமையாக மீறப்பட்டிருக்கிறது. துணைவேந்தர்கள் தங்களுடைய பணிக்காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு எவ்வித கொள்கை முடிவுகளையும் எடுக்க கூடாது என தமிழக அரசால் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ள நிலையில் இங்கே முற்றிலுமாக மீறப்பட்டிருக்கிறது.

ஏனென்றால் இப்போது தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் அடுத்த துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் நீதிமன்றத்தை நாடிய பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணி  வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார்.

தனியார் பெருநிறுவனம் போல் கேவியட் மனு தாக்கல் செய்து படு பாதுகாப்பாய் துணைவேந்தர் கமலா சங்கரன் செயலாற்றி வருகிறார். இவ்வளவு அவசரம் காட்டுவதன் பின்னணி என்ன என்று புரியவில்லை. நீதிபதிகளே பல்கலைக்கழகத்தின் நிர்வாக அவையிலும் பொது அவையிலும் இருப்பதாலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே பல்கலையின் வேந்தராகவும் இருப்பதாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்போது சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யாமல் உச்சநீதி மன்றத்தை நாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. துணைவேந்தர் கமலா சங்கரனின் அத்துமீறல்களால் தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு பெரும் இன்னல் விளைந்திருக்கிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாய் நீதி வழங்க வேண்டிய நீதியரசர்களே விதிமீறல்களுக்கு காரணகர்த்தர்களாக இருந்திருக்கின்றனர்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி நியமிக்கப்படாத இந்நேரத்தில் பல்கலையின் சார்பு வேந்தராக விளங்கும் சட்ட அமைச்சர் சி. வி சண்முகம் இதில் உடனே தலையிட்டு இவ்வறிக்கையினை நிறுத்த வேண்டும். என்பது பேராசிரியர்கள் கோரிக்கையாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.