Skip to main content

வேலூர் தொகுதியில் தொடங்கியது ரெய்டு- ஒரு தலைபட்சமாக வருமானவரித்துறை?

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று இருக்க வேண்டிய வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அதிக பணம் பறிமுதல் நடவடிக்கையால் ரத்து செய்யப்பட்டது. மூன்று மாதத்திற்கு பின்பு வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜூலை 11 ஆம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் நடைபெற்று வருகிறது.

 


இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தருவது, வாக்குக்கு பணம் தர வைத்திருப்பது, அதிக பண நடமாட்டம் குறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தாருங்கள் என சென்னை வருமானவரி புலனாய்வுத்துறை விளம்பரம் செய்துள்ளது. அதற்காக கட்டணம்மில்லா தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை 13 ஆம் தேதி மதியம் வேலூர் மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ள புதுவசூர் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்த ஏழுமலை என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனைக்காக செய்தனர்.

 

 

VELLORE LOK SABHA ELECTION INCOME TAX DEPARTMENT START THA RAID

 


சோதனையில் அவரது வீட்டில் இருந்து 27 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்கிற தகவலை வருமானவரித்துறை அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவித்துள்ளது. அதோடு, இந்த பணம் தன்னுடையது தான் என ஏழுமலை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பணம் தேர்தல் செலவுக்காக வைத்திருந்த பணமா? திமுக வேட்பாளர் தரப்பில் இருந்து தந்து வைக்கப்பட்டுள்ளதா என்கிற கோணத்தில் வருமானவரித்துறை விசாரணை நடத்தி வருகின்றனர் எனக்கூறப்படுகிறது.

 


இது தொடர்பாக திமுக வேட்பாளர் தரப்பில் விசாரித்த போது, அந்த பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியால் அவமானமாகியுள்ள பாஜக- அதிமுக கூட்டணி, இந்த வேலூர் தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என துடிக்கிறது. இதற்காக அரசு இயந்திரம் முழுவதையும் திமுக பக்கம்மே திருப்பி விட்டு எங்களை முடக்க திட்டமிட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் செய்யவே நெருக்கடி தர முடிவு செய்து, மன ரீதியாக பலவீனப்படுத்த முடிவு செய்துள்ளார்கள். இதனையெல்லாம் அறிந்தே தேர்தல் வேலை செய்ய தொடங்கியுள்ளோம் என்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு சதவீதம் சரிவு; சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Radhakrishnan explained decline in voter turnout

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் மொத்தம் 69.46 % வாக்குகள் பதிவாகியுள்ளது.  தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டதால் பறக்கும் படைகள் உள் மாவட்டத்தில் கலைக்கப்படும்.

அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் எல்லைகளில் மட்டும் சோதனை  நடைபெறும். தேர்தல் நடத்தை விதிகளில் எந்த மாற்றமும் கிடையாது. மேலும் வாக்கு சதவீதம் குறித்து காலை 11 மணியளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். 2019 மக்களவை தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் வாக்குப்பதிவு 3% சரிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் 10ல் 4பேர் வாக்களிக்கத் தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.