Skip to main content

திமுகவினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபத்துக்கு சீல்!

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வரும் ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறவுள்ளதால், அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தால் நகரமே தகிக்கிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற பல்வேறு அமைப்புகள் திமுக கூட்டணியில் உள்ளன.



அதோடு, முத்தலாக் சட்டத்தில், மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசாங்கத்தோடு சேர்ந்து அதிமுக நடத்திய நாடகத்தால் இஸ்லாமிய அமைப்புகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள இஸ்லாமிய கட்சிகள் தங்கள் சமூக மக்களிடம் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

 

 

vellore lok sabha election dmk election campaign  Seal to the wedding hall!

 


அதன்படி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா போன்ற பல இஸ்லாமிய தலைவர்கள் ஆம்பூர் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜமாத்களின் முத்தவல்லிகள் மற்றும் ஜமாத் நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தினர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர். திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்தும் கலந்துக்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
 

 

vellore lok sabha election dmk election campaign  Seal to the wedding hall!

 


தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாமல் திருமண மண்டபத்தில் எப்படி இஸ்லாமியர்கள் கூட்டம் நடத்தலாம் என அதிமுக தரப்பில் இருந்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி ஆம்பூர் தாலுக்கா தேர்தல் அதிகாரியும், ஆம்பூர் தாசில்தாருமான சுஜாதா விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுமதி பெறவில்லை எனச்சொல்லி அந்த தனியார் திருமண மண்டபத்துக்கு சீல் வைத்தனர். இந்த விவகாரம் இஸ்லாமிய மக்களிடையே பரவியது. எத்தனையோ விதிமீறல்கள் வேலூர் தொகுதியில் நடைபெறுகின்றன. அப்படியிருக்க எங்கள் சமூக மக்கள் நடத்திய கூட்டத்தை மட்டும் கணக்கில் எடுத்து அனுமதி பெறவில்லையென மண்டபத்துக்கு சீல் வைத்தது அராஜகம் என ஆளும் கட்சியான அதிமுக மீது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.