Skip to main content

படிக்காமலேயே மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவர் கைது!

Published on 27/10/2020 | Edited on 28/10/2020

 

Vellore Fake doctor arrested

 

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள பிரம்மபுரம் கிராமம் திருவள்ளுவர் தெருவில் வசிப்பவர் விஜயகுமாரி. இவரது கணவர் வெங்கட்ராமன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார்.

விஜயகுமாரி அதேபகுதியில் பல ஆண்டுகளாக பெட்டிக்கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். வெளிப்பார்வைக்கு பெட்டிக் கடையாக இருந்தாலும் உள்ளே மருத்துவ கிளினிக்காக பயன்படுத்தி வந்துள்ளார். தேடிவரும் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் மருத்துவப் படிப்பு படிக்கவில்லை என்பதும் அலோபதி மருத்துவம் கூட படிக்காமல் நர்சிங் படிப்பை மட்டும் படித்துவிட்டு போலியாக தன்னை மருத்துவர் எனக் கூறிக்கொண்டு சிகிச்சை அளித்ததை அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

இதனை அடுத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், முதன்மை மருத்துவ அலுவலர் செந்தாமரைக் கண்ணன், மருத்துவக் குழுவினர் காட்பாடி வட்டாட்சியர், வருவாய்த் துறையினர், அக்டோபர் 27 ஆம் தேதி நேரடியாகச் சென்று ஆய்வு செய்து போலி மருத்துவர் என்பதனை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் தர, அதன் அடிப்படையில் விஜயகுமாரியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கிளினிக்காக செயல்பட்டு வந்த கடைக்கு சீல் வைத்து அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தன்னை மருத்துவர் எனக் கூறிக்கொண்டு மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்தப் போலி மருத்துவரிடம் சில மாதங்களுக்கு முன்னர், 'நீ போலி டாக்டர் என்பதை செய்தி வெளியிடுவோம்' எனப் பணம் கேட்டு மிரட்டியதாக 4 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்தப் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்பே அதிகாரிகள் சரியாக விசாரித்திருந்தால் அந்தச் செய்தியாளர்களோடு சேர்ந்து இந்தப் போலி மருத்துவரையும் கைது செய்திருக்க முடியும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.