Skip to main content

ஏரிக்கு வராத நீர்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்... களத்தில் குதித்த திமுக எம்.எல்.ஏ..!

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

vellore district rain water dame issue DMK MLA


'நிவர்' புயல் காரணமாக, வேலூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம் தாலுக்காவில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயப் பயிர்கள் அழிந்து, விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

 

அதேநேரத்தில் பாலாறு உட்பட சிறு நதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆந்திராவில் மழை பெய்வதால் பாலாற்றில் அதிகளவு நீர் வருகிறது. விவசாயத்துக்குப் பயன்படும் அளவில் ஆற்று நீரை தேக்குவதற்குத் தேவையான அணைக்கட்டுகள் இல்லாத நிலை மற்றும் பாலாறு உட்பட கிளை நதிகளில் இருந்து ஏரிகளுக்குச் செல்லும் கால்வாய்களைச் சீர் செய்யாதது, குடிமராமத்துப் பணிகள் செய்யாதது உள்ளிட்ட காரணங்களால் ஏரிகளுக்குத் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.


மோர்தானா அணையில் இருந்து நீர் வெளியேறி ஏரிகளுக்குச் செல்ல வேண்டும். ஆனால், அதிகாரிகள் கால்வாய்களைச் சீர் செய்யாததால் அணைக்கட்டுத் தொகுதியில் உள்ள சதுப்பேரி, பொய்கை, செதுவாலை உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர் செல்லவில்லை.


இதுபற்றி அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவும், வேலூர் மாவட்ட தி.மு.க மா.செவுமான நந்தகுமார் கவனத்துக்குச் சென்றது. தற்காலிகமாக தனது சொந்தச் செலவில் அந்தக் கால்வாய்களைத் தூர்வார இயந்திரங்களை வரவழைத்துப் பணிகளைச் செய்துள்ளார் நந்தகுமார். கால்வாய் சீரமைக்கும் பணிகளை உடனடியாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடங்க வேண்டுமென அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஆனால் அதிகாரிகள் பணிகளைச் செய்யவில்லை.

 

இதனால், அதிகாரிகளைக் கண்டித்து, நவம்பர் 30 -ஆம் தேதி குடியாத்தம் – பள்ளிக்கொண்டா சாலையில், தி.மு.க.வினர் 200 பேரோடு மறியலில் ஈடுபட்டார் எம்.எல்.ஏ நந்தகுமார். அங்கு வேலூர், பள்ளிக்கொண்டா காவல்நிலைய காவலர்கள் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர். காவல்துறை அதிகாரி ஒருவர், எம்.எல்.ஏவிடம் ஒருமையில் பேசியுள்ளார். இதனைக் கேட்டு எம்.எல்.ஏவுடன் இருந்த தி.மு.க நிர்வாகிகள் கொதிப்படைந்து, மரியாதை கொடுத்து பேசுங்க எனச் சொல்ல, காவல்துறை அதிகாரிகளுக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதமனாது. பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து விரைவில் சரி செய்கிறோம் என்றனர். அதன்பின்னர் சாலைமறியலை கைவிட்டனர்.


இதுபற்றி நந்தகுமார் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் பேசும்போது, 29 ஆண்டுகளுக்குப் பின்பு மோர்தானா அணை நிரம்பி 10,500 கன அடி நீர் வெளியேறியது. அந்த நீர், கடலில் சென்று கலந்தது. மோர்தானா அணையின் கால்வாய் சீரமைத்திருந்தால், என் தொகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பியிருக்கும். ஆனால், அதிகாரிகள் அதனைச் செய்யவில்லை. மழைக்காலத்துக்கு முன்பே நாங்கள் கால்வாயைச் சீரமைக்க வேண்டும் எனப் போராட்டம் செய்தோம். அதிகாரிகள் பணமில்லை எனச் சொல்லி செய்யவில்லை. பொதுப் பணித்துறையின் உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு தந்தோம். இந்த அ.தி.மு.க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால் நீர் வந்திருக்கும், தி.மு.க.வினரான நாங்கள் இப்போது போராட வேண்டியிருக்காது. நான் சொந்தச் செலவில் கால்வாயை சீரமைத்துக்கொண்டு இருக்கிறேன். அதனைச் செய்யக்கூடாது என அதிகாரிகள் தடுக்கிறார்கள். தி.மு.க.வுக்கு பெயர் வந்துவிடும் என அதிகாரிகள் தடுப்பது நியாயமா எனக் கேள்வி எழுப்பினார்.  

 

cnc

 

கால்வாயைச் சீரமைக்கிறோம் எனச் சாலை மறியலின்போது அதிகாரிகள் கூறினார்களே தவிர, இப்போதுவரை சீரமைக்கும் பணியைச் செய்யவில்லை. இதனால் எம்.எல்.ஏ நந்தகுமார், தனது சொந்த நிதியில் இருந்து தொடர்ந்து கால்வாய் சீரமைக்கும் பணியினை செய்துவருகிறார்.

 

வேலூர் மாவட்ட ஆட்சியராக உள்ள சண்முகசுந்தரத்துக்கும் – அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ நந்தகுமாருக்கும் இடையே முரண்பாடு உள்ளது. இந்த முரண்பாட்டுக்குக் காரணம், எம்.எல்.ஏ என்கிற முறையில், மக்கள் தந்த கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொண்டுசென்று தர முயன்றபோது, வாங்காமல் போக்குக் காட்டியவர் கலெக்டர். அதோடு, அதிகாரிகள் சரியாகச் செயல்படாதது குறித்து மேடையிலேயே அமைச்சர் வீரமணி முன்னிலையிலேயே கூறியது, அமைச்சரின் அத்துமீறிய பேச்சை, மேடையிலேயே கண்டித்தது போன்றவற்றால் கலெக்டர் அதிருப்தியாகி, எம்.எல்.ஏ நந்தகுமார் எதாவது செய்யுங்கள் என்றால் செய்யாதீர்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.