Skip to main content

ஏட்டு உத்தரவை மதித்த இன்ஸ்பெக்டர்; கைது செய்யச்சொன்ன நீதிபதி

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

 


வேலூர் மாநகரத்தை அடுத்த பொய்கை கிராமத்தை சேர்ந்தவர் 60 வயதை கடந்த ராமதாஸ். சி.எம்.சி மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு ஒய்வு பெற்றுள்ளார். இதே தெருவில் ராமதாஸ் வீட்டுக்கு அருகில் சித்ரா என்கிற பெண்மணி தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி பல இளைஞர்கள், சில வழக்கறிஞர்கள் வந்து நள்ளிரவுக்கு பின் திரும்பி செல்கின்றனர்.

 

hc


இவரது வீட்டிற்கு வந்து இறங்கும் அரசின் ரேஷன் அரிசி இரவு நேரத்தில் ஆட்டோ மூலமாக கடத்தப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர் இந்த பகுதியை சேர்ந்தவர்கள். அதில் குடிபொருள் புலனாய்வு பிரிவினர் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.


கடந்த ஜனவரி மாதம், இரவு 9 மணியளவில் தனது வீட்டுக்கு ராமதாசின் மகன் வந்தபோது சில இருசக்கர வாகனங்கள் தெருவை அடைத்துக்கொண்டு நின்றுள்ளது. இதுதொடர்பாக வண்டியை ஓரமாக நிறுத்த வேண்டியதுதானே என கேள்வி எழுப்பியுள்ளனர். இது வாய் சண்டையாக மாறியுள்ளது.


அந்த பெண்மணி தனது வீட்டுக்கு வருபவர்களிடம், ராமதாசை மிரட்டிவிட்டு செல்லுங்கள் எனச்சொல்ல சிலர் மிரட்டல் தெனியில் பேசிவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். ஒருமுறை சில வழக்கறிஞர்கள் குடித்துவிட்டு ராமதாஸ், அவரது மனைவி மற்றும் மருமகளை மோசமான வார்த்தையில் பேசி தாக்கியுள்ளனர். இதில் ராமதாஸ்க்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.


இதுதொடர்பாக சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார் ராமதாஸ். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் அந்த காவல்நிலையத்தின் எஸ்.பி ஏட்டு தீனதயாளன் என்பவர் தடுத்துவந்துள்ளார். எஸ்.பி ஏட்டு வின் உத்தரவை இன்ஸ்பெக்டரும் ஏற்றுக்கொண்டுள்ளார். அதற்கு அடுத்து வந்த இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் எஸ்.பி ஏட்டு உத்தரவை ஏற்றுக்கொண்டு, அந்த பெண்மணிக்கும், தாக்கிய சில வழக்கறிஞர்களுக்கும் ஆதரவாக நடவடிக்கை எடுக்காமல் தடுத்துவந்துள்ளார்.


இதனால் பாதிக்கப்பட்ட ராமதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நடவடிக்கை அறிக்கையோடு காவல்நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். மூன்று முறை உத்தரவிட்டும் உயர்நீதிமன்றத்தில் ஆய்வாளர் ஆஜராகாததால், நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆய்வாளரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென வேலூர் எஸ்.பி பர்வேஷ்குமார்க்கு ஆகஸ்ட் 19ந்தேதி உத்தரவிட்டுள்ளார் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ்.


அந்த உத்தரவில் ஜாமீன் இல்லாத பிடிவாரண்ட் பிரப்பித்து உத்தரவிட்டுள்ளார். ஆய்வாளர் அண்ணாதுரை தற்போது அந்த காவல்நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு அரக்கோணம் சரகத்தில் பணியாற்றுவதாக கூறுகின்றனர் காவல்துறை தரப்பில்.


பாதிக்கப்பட்ட ராமதாஸ் குடும்பத்தை சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு கும்பல் வந்து மிரட்டிவிட்டு சென்றுள்ளது. இதுப்பற்றி மீண்டும் புகார் தந்துள்ளார். அந்த புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வைத்துள்ளனர் என்கின்றனர் அந்த குடும்பத்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு; பொன்முடி வழியில் ஐ.பெரியசாமி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
order from judge in I.Periyaswamy case; its going on Ponmudi way

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனை மேல்முறையீட்டு வழக்கில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் அமைச்சர் பதவியை பெரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுவசதி துறையில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை ஐ.பெரியசாமி தரப்பு எடுத்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைய முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

 I.Periyaswamy on Ponmudi way

இந்த வழக்கினுடைய விசாரணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பில், 'சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கு சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முறையாக ஒப்புதல் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் எனவும் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விசாரணையை சிறப்பு நீதிமன்றம் 2024 ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கொடுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.