Skip to main content

என்னை காப்பாற்றிய வீரப்பன்... நக்கீரன் ஆசிரியர் பேச்சு!

Published on 05/01/2020 | Edited on 05/01/2020

எழுத்தாளர் க.அரவிந்த் குமார் எழுதிய இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ் இலக்கிய உலகம் கவனத்தில் கொள்ளாத கடல்சார் மக்களைப் பற்றிய பதிவு தேசம்மா நூல் வெளியீட்டு விழா சென்னை நாம் அறக்கட்டளை, தி.நகரில் 04.01.2020 சனிக்கிழமை மாலை (06.00) மணிக்கு நடைபெற்றது.

இதில் நக்கீரன் ஆசிரியர், விடுதலை சிறுத்தைகள்கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ், எழுத்தாளர் இரா.முருகவேள், எழுத்தாளர் என்.ஸ்ரீராம், எழுத்தாளர் ஷாஜி ஆகியோர் சிறுகதை புத்தகத்தை வெளியிட்டனர்.

 

ad


சிறுகதை புத்தகத்தை வெளியிட்டு பேசிய நக்கீரன் ஆசிரியர், தேசம்மா சிறுகதை எழுதிய தம்பி அரவிந்த்க்கு வந்திருக்கும் அனைவரின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் இந்த நிகழ்ச்சியில்  தம்பி பாம்பன் பாடிய பாடலில் செல்போனால் புத்தகவாசிப்பு குறைந்து போச்சு என்பது நிதர்சனமான உண்மை.

இந்த சிறுகதை மீனவர்கள் கஷ்ட, நஷ்டங்களை பற்றிய கதையாக உள்ளது. மீனவர்கள் பற்றிய கதை என்றதும் என்னுடைய நினைவுக்கு வருவது அயோத்தி குப்பம் வீரமணிதான். அயோத்தி குப்பம் வீரமணி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அயோத்தி குப்பம் வீரமணியை கர்நாடக போலீசார் தேடுகிறார்கள் என்று செய்தி வந்தது. 2001இல், அயோத்தி குப்பம் வீரமணி தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் கடலில் இருப்பதால் பார்க்க முடியல என்று சொன்னார்கள். வீரமணியை ஏன் கர்நாடக போலீஸ் பார்க்க முயல்கிறது என்று நினைத்தேன். கடலிலிருந்து அயோத்தி குப்பம் வீரமணி வரும்வரை காத்துக் கிடந்தார்கள். வீரமணி பிடிக்க வந்தவர்கள் தங்கிய இடங்களில் எல்லாம் நமது ஆட்கள் தகவல்களை சேகரித்து கொடுத்தார்கள். இங்கே தங்கி இருக்கிறார்கள், அங்கே தங்கி இருக்கிறார்கள் என்பதையெல்லாம். அதேபோல் வீரமணியை அவர்கள் சென்று பார்த்ததாகவும், பார்த்தபோது தலையை தொங்கப்போட்டுக் கொண்டு போலீசார் சென்றதாகவும் செய்தி வந்தது.

என்ன நடந்தது, நாம் வீரமணிக்கு ஒரு ஆள் வச்சு வீரமணியிடம் என்ன கேட்டார்கள் என விசாரித்ததில், கர்நாடக போலீசார் என்னை கொலை செய்யணும் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுள்ளார்கள். மூன்று மாதமாக என்னை தூக்குவதற்காக திட்டம் தீட்டி இருந்தார்கள். அது முடியாததால் அயோத்தி குப்பம் வீரமணியிடம்  சொல்லி தீர்த்துக்கட்ட முடிவு எடுத்தார்கள். இது எப்போ 2001இல், இதற்கு வீரமணி என்ன சொன்னார் என்பது தான் முக்கியம். ''யோவ் அவரு எவ்ளோ பெரிய ஆளு வீரப்பனையே பார்த்தவரு அவரை போய் தூக்கம் சொல்றியே போயா'' என்று சொல்லிவிட்டார். வீரப்பன் எங்கு காப்பாற்றி இருக்கிறான் நம்மள பாருங்க என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வன்னியரசு எழுதிய ‘மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி’ நூல் வெளியீட்டு விழா (படங்கள்)

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு எழுதிய ‘மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி’ எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று (27-02-24) மாலை 3 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர் தலைமை தாங்கினார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி நூலினை வெளியிட்டு, திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாலர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.