அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து கவிஞர் வைரமுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கவிஞர் வைரமுத்து நேற்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உணவு ஒவ்வாமை மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவினால் அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பின்னர் அவர் நலம் பெற்று இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.