Skip to main content

இதோ கட்சி அலுவலகம்... கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்... - மக்கள் நலனில் கம்யூனிஸ்ட் கட்சி 

Published on 01/04/2020 | Edited on 01/04/2020

தமிழகத்தில் நான்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை முழுமையாக கரோனா வைரஸ் நோய் தடுப்பு சிறப்பு மருத்துவமனையாக அரசு மாற்றியுள்ளது. அதேபோல் ஒவ்வொரு தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வருமுன் எச்சரிக்கை என்பது போல ஏறக்குறைய 10 பேர் தனி அறையில் சிகிச்சை பெறும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பற்றாக்குறை ஏற்பட்டு ஏதாவது அவசர தேவை ஏற்பட்டால்..? அதற்குதான் ஒரு முன்னுதாரனமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கட்சி அலுவலகம் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை அப்படியே இந்த சிகிச்சைக்காக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்தார்.

 

Here's the party office ... use to treat corona ... - Communist Party in the intere


அதன் பிறகு இப்போது கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவிப்பு கொடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம் சென்னை தியாகராயநகரில் செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் உள்ளது. சென்ற மூன்று வருடங்களுக்கு முன்புதான் கட்சி அலுவலகம் பல மாடிக் கட்டிடங்களாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலுள்ள இரண்டு தளங்களை அதாவது 74 ஆயிரம் சதுர அடியை சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளலாம் என மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிவிப்பு கொடுத்துள்ளார்.

மக்கள் நலனுக்காக வீதியில் இறங்கி போராடுவது மட்டும் இயக்கமல்ல இது போன்ற ஆபத்து நேரத்தில் அந்த மக்கள் நலன் பெற கட்சி அலுவலகம் உதவும் என்பதையும் தி.மு.க.வினர் மற்றும் கம்யூனிஸ்ட்கள் நிருபித்துள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஜி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மறைவு! 

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Former communist MLA S. Rajasekaran passed away

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜசேகரன் மறைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நிறைந்திருந்த குளமங்கலம் வடக்கு கிராமத்தில் ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ராஜசேகரன். கீரமங்கலத்தில் பள்ளியில் படிக்கும் போது கிராமங்கள் தோறும் நடக்கும் கம்யூனிஸ்ட் மக்கள் நலப் போராட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்களைப் பார்த்து இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு ஜமீன் ஒழிப்பு போராட்டம், தொழிலாளர் நலப் போராட்டங்களில் பங்கேற்றவர். பல போராட்டங்களை முன்னெடுத்து வெற்றியும் கண்டார். அதேபோல படிப்படியாக கட்சிப் பதவிகளிலும் முன்னேறினார்.

2001ம் ஆண்டு ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டாலும் அடுத்து 2006ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

2011ல் சட்டமன்ற உறுப்பினர் காலம் முடிந்த பிறகு கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதன் பிறகும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு புதுக்கோட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் இன்று புதன் கிழமை உயிரிழந்தார்.

Next Story

ஆளுநர் தேநீர் விருந்து; காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு!

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Governor's Tea Party; Congress, Communist parties boycott

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பர்.

அந்த வகையில் குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி  மாலை ஆளுநர் ஆர்.என். ரவி தேநீர் விருந்து அளிப்பது குறித்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.